Don't Miss!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Education தமிழக வேளாண் துறையில் காத்திருக்கும் வேலை...!
- News ஜெகத்ரட்சகன் சொத்து மதிப்பு எவ்வளவு ? கடன் மட்டும் ரூ.649 கோடி.. சொந்தமாக ஒரு கார் கூட இல்லை
- Lifestyle இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
அன்புச்செழியன் மீது மேலும் 2 முன்னணி தயாரிப்பாளர்கள் போலீசில் புகார்
சென்னை : முன்னணி தயாரிப்பாளர்கள் ஞானவேல் ராஜா மற்றும் சி.வி.குமார் ஆகியோர் ஃபைனான்சியர் அன்புச்செழியன் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
சசிகுமாரின் மைத்துனரும், கம்பெனி ப்ரொடக்ஷன்ஸ் நிர்வாகியுமான அசோக் குமார் சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். ஃபைனான்சியர் அன்புச்செழியனிடம் கந்துவட்டிக்குப் பணம் வாங்கி அவரது மிரட்டலால் தற்கொலை செய்துகொண்டதாக கடிதம் எழுதி வைத்திருந்தார் அசோக் குமார்.
இதனால் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுசீந்திரன், அமீர் உள்ளிட்ட இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் சிலர் அன்புச்செழியன் மீது குற்றம் சாட்டினர். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரினர்.
இதுதொடர்பாக, நடிகர் சசிகுமார் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் தலைமறைவாக இருக்கும் அன்புச்செழியனைத் தேடி வருகின்றனர். அவர் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தலைமறைவாக இருக்கலாம் எனக் கருதி அங்கும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அன்புச்செழியனுக்கு ஆதரவாகவும் பல குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. சீனு ராமசாமி, சுந்தர் சி, விஜய் ஆண்டனி, மனோபாலா, தேவயானி உள்ளிட்டோர் அன்புச்செழியன் நியாயமானவர் என அவருக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
சசிகுமாரிடம் வளசரவாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திடீர் திருப்பமாக, முன்னணி தயாரிப்பாளர்களான ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா, திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி.வி.குமார் ஆகியோர் அன்புச்செழியன் மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.