Don't Miss!
- News தப்பி தவறி கூட.. இந்த டைம்ல வெளியே போகாதீங்க.. தமிழ்நாட்டிலும் வெப்ப அலை.. முக்கிய அறிவுரை!
- Sports அவர் ஒருவரை தவிர மற்ற ஸ்பின்னர்களுக்கு பயம் .. 120 கிமீ வேகம் அவசியமா.. வருணை பொளந்த ஹர்பஜன் சிங்!
- Lifestyle தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- Technology Google Pay-க்கு அடுத்த ஆப்பு.. உதறிதள்ளிய NPCI.. கதிகலங்கிய யூசர்கள்.. Phonepe-க்கும் அதே கதி.. என்ன ஆச்சு!
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
"அவங்க விட்டாலும் இவங்க விடமாட்டேங்கிறாங்க..." 'பத்மாவத்' தடைக்கு எதிராக வழக்கு!
Recommended Video
சென்னை : சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாகித் கபூர் ஆகியோர் முதன்மை ரோலில் நடிக்க உருவாகி உள்ள படம் 'பத்மாவத்' என டைட்டில் மாற்றப்பட்ட 'பத்மாவதி'.
சித்தூர் ராணி பத்மாவதி, முகலாய மன்னன் அலாவுதீன் கில்ஜியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் பத்மாவதியை தவறாக சித்தரித்துள்ளதாகக் கூறி ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சென்சார் போர்டு அனுமதித்தும், பல்வேறு மாநிலங்களில் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை நீக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் வழக்கு தொடுத்துள்ளனர்.
பத்மாவத்
பல்வேறு காட்சிகளை நீக்கும் உத்தரவுடன் சென்சார் போர்டு இந்தப் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் அளித்தது. அதோடு படத்தின் பெயரும் மாற்றப்பட்டு 'பத்மாவத்' என்ற பெயரில், வருகிற ஜனவரி 25-ம் தேதி வெளியாக உள்ளது.
நீடிக்கும் தடை
அதேநேரத்தில், இந்தப் படத்தை வெளியிடுவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு உள்ளது. ராஜஸ்தான், குஜராத், ஹரியானா போன்ற மாநிலங்களில் இப்படத்தை திரையிடப்போவது இல்லை என அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
தயாரிப்பாளர்கள் தொடர்ந்த வழக்கு
இந்நிலையில் 'பத்மாவத்' படத்தின் தயாரிப்பாளர்களான அஜித் அந்தாரே மற்றும் சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளனர். சென்சார் போர்டு அனுமதித்தும் தடை விதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தடையை நீக்க கோரிக்கை
சென்சார் போர்டு அனுமதித்தும், பல்வேறு மாநிலங்களில் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை நீக்க வேண்டும் என்று தங்களது மனுவில் கோரியுள்ளனர். இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டுள்ளது. விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது.