Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
"அவங்க விட்டாலும் இவங்க விடமாட்டேங்கிறாங்க..." 'பத்மாவத்' தடைக்கு எதிராக வழக்கு!
Recommended Video
சென்னை : சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாகித் கபூர் ஆகியோர் முதன்மை ரோலில் நடிக்க உருவாகி உள்ள படம் 'பத்மாவத்' என டைட்டில் மாற்றப்பட்ட 'பத்மாவதி'.
சித்தூர் ராணி பத்மாவதி, முகலாய மன்னன் அலாவுதீன் கில்ஜியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் பத்மாவதியை தவறாக சித்தரித்துள்ளதாகக் கூறி ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சென்சார் போர்டு அனுமதித்தும், பல்வேறு மாநிலங்களில் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை நீக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் வழக்கு தொடுத்துள்ளனர்.
பத்மாவத்
பல்வேறு காட்சிகளை நீக்கும் உத்தரவுடன் சென்சார் போர்டு இந்தப் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் அளித்தது. அதோடு படத்தின் பெயரும் மாற்றப்பட்டு 'பத்மாவத்' என்ற பெயரில், வருகிற ஜனவரி 25-ம் தேதி வெளியாக உள்ளது.
நீடிக்கும் தடை
அதேநேரத்தில், இந்தப் படத்தை வெளியிடுவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு உள்ளது. ராஜஸ்தான், குஜராத், ஹரியானா போன்ற மாநிலங்களில் இப்படத்தை திரையிடப்போவது இல்லை என அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
தயாரிப்பாளர்கள் தொடர்ந்த வழக்கு
இந்நிலையில் 'பத்மாவத்' படத்தின் தயாரிப்பாளர்களான அஜித் அந்தாரே மற்றும் சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளனர். சென்சார் போர்டு அனுமதித்தும் தடை விதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தடையை நீக்க கோரிக்கை
சென்சார் போர்டு அனுமதித்தும், பல்வேறு மாநிலங்களில் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை நீக்க வேண்டும் என்று தங்களது மனுவில் கோரியுள்ளனர். இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டுள்ளது. விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது.