நடிகையின் கசமுசா புகைப்படங்களை வெளியிட்ட முன்னாள் காதலர்
திருவனந்தபுரம்: கேரளாவில் நடிகையின் ஆபாச புகைப்படங்களை வாட்ஸ்ஆப்பில் வெளியிட்டு மிரட்டிய தயாரிப்பு நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர்.
மலையாள நடிகை மைதிலி தயாரிப்பு நிர்வாகி கிரண் என்பவருடன் கடந்த 2008ம் ஆண்டு நெருங்கிப் பழகியுள்ளார். கிரண் தனக்கு ஏற்கனவே திருமணமானதை மறைத்துவிட்டார்.
மைதிலிக்கு பின்னர் தான் இந்த உண்மை தெரிய வந்து அவரை பிரிந்தார்.

மிரட்டல்
ஒழுங்காக பணம் கொடு இல்லை என்றால் நாம் இருவரும் நெருக்கமாக இருக்கும்போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என கிரண் மைதிலியை மிரட்டி வந்துள்ளார்.
மைதிலி
கிரணின் மிரட்டலை மைதிலி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில் கிரண் மிரட்டியபடியே கசமுசா புகைப்படங்களை வாட்ஸ்ஆப்பில் வெளியிட்டார்.

வைரல்
கிரணும், மைதிலியும் அரை நிர்வாணமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. இதை பார்த்த மைதிலி அதிர்ச்சி அடைந்து கிரண் மீது போலீசில் புகார் அளித்தார்.

கைது
மைதிலி அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கிரணை கைது செய்துள்ளனர். மேலும் கிரண் வெளியிட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வைரலாக்கிய சிலரும் கைது செய்யப்பட உள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











