Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஆரியை வெளியேற்ற ஸ்கெட்ச் போடும் பாலா.. புதுசா ஒரு குரூப்பை உருவாக்க திட்டம்.. ஆஜீத் தான் அல்டி!
சென்னை: அர்ச்சனா மற்றும் ரியோவை வெளியே அனுப்ப அனிதா சம்பத் ஒரு புறம் திட்டம் போட்டு செயல்படும் நிலையில், இன்னொரு புறம் ஆரியை வெளியேற்ற பாலா திட்டம் தீட்டி வருகிறார்.
இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது புரமோ தற்போது வெளியாகி ஆரி ஆர்மியனரை ரொம்பவே அப்செட் ஆக்கியுள்ளது.
எல்லோரும் எப்போ விஷேசம்னு கேட்டா எப்டி.. கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய நடிகர்!
காரணம் பாலா மற்றும் ரம்யா கூட சேர்ந்து கொண்டு சுட்டிக் குழந்தை ஆஜீத் எல்லாம் ஆரிக்கு எதிராக பேசுவதை கேட்டுத் தான்.
அர்ச்சனாவை காப்பாற்ற
வீட்டுக்கு போகணும், வீட்டுக்கு போகணும்னு சொல்லியே அர்ச்சனா அக்கா இந்த பிக் பாஸ் வீட்டில் 100 நாட்களை ஓட்டி விடுவார் போலவே தெரிகிறது. கோழிப் பண்ணை டாஸ்க்கில் ஒரு புறம் பாலாவுக்கும் மறுபுறம் அர்ச்சனாவுக்கும் பெஸ்ட் பர்ஃபார்மர் அவார்டு ஹவுஸ்மேட்களால் வழங்கப்படுவதை முதல் புரமோவில் காட்டியிருந்தனர். அடுத்த வாரம் மறுபடியும் அர்ச்சனாவை தலைவியாக்கி அவரை காப்பாற்ற திட்டம் தீட்டுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பாவம் ரியோ
தங்க முட்டையை உடைத்து ஒரு சுற்றை விளையாட வாய்ப்பை இழந்த பாலாவுக்கும், தனது முட்டையை பறிகொடுத்து விட்டு சண்டை போட்ட அர்ச்சனாவுக்கும் பெஸ்ட் பர்ஃபார்மர் விருது கொடுக்கிறாங்க, ஆனால், கேமை சரியாக புரிந்து கொண்டு விளையாடி தனது முட்டையை காப்பாற்றிய ரியோவின் பெயரை யாருமே சொன்னதாக தெரியவில்லை.
சிறைக்குள் ஷிவானி
இந்த சீசனில் சிறைக்கு சென்றவர்களே மறுபடி மறுபடி செல்கின்றனர். ஆரியை கட்டம் கட்டி அனுப்ப அர்ச்சனா கேங் முடிவு செய்த நிலையில், கடைசியில் அவர் எஸ்கேப் ஆகிவிட்டார். ஏற்கனவே கண்ணாடி சிறைக்கு சென்ற ஷிவானி மீண்டும் சிறைக்குள் தள்ளப்பட்டுள்ளார். அவருடன் இந்த முறை கேபியையும் சேர்த்து அனுப்பி விட்டனர்.
ஷிவானிக்கு நேரம் நெருங்கிடுச்சு
கடந்த வாரம் அனிதாவுடன் சிறைக்கு சென்ற ஜித்தன் ரமேஷையும், இறுதியாக கமல் சிறைக்கு அனுப்பிய நிஷாவையும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே அனுப்பினர். இந்நிலையில், இந்த முறை சிறைக்குள் அடைக்கப்பட்டிருக்கும் இருவரில் கேபி நாமினேஷனில் இல்லாத நிலையில், ஷிவானி வெளியேற்றப்படுவாரா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
பாலாவுக்கு கோபம்
ஷிவானியை எப்படியாவது கடைசி வரை காப்பாற்றி விடலாம் என நினைத்து அவருக்கு பெஸ்ட் பர்ஃபார்மர் என பாலா ஓட்டுப் போட்ட நிலையில், ஆரி வச்ச அதிரடி ஆப்பு காரணமாக ஷிவானி சிறைக்குள் தள்ளப்பட்டார். இந்நிலையில், ஆரியை எப்படியாவது வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்கிற தீவிரத்துடன் பாலா நடத்தும் பேச்சுவார்த்தை மூன்றாவது புரமோவில் அனல் பறக்கிறது.
அவருக்கு மட்டும் தான் தகுதி
பிக் பாஸ் டைட்டிலை தட்டிச் செல்லும் தகுதி உனக்கு இல்லைன்னு சொன்னார் என ரம்யாவிடமும், ஆஜீத்திடமும் சொன்ன பாலா, என்னையும் அப்படித்தான் அவர் மட்டம் தட்டுகிறார். அவருக்கு மட்டுமே பிக் பாஸ் டைட்டிலை தட்டிச் செல்லும் தகுதி இருப்பதாகவே விளையாடி வருகிறார் என்று பாலா சொன்னதும் ரம்யா ரொம்ப நக்கலாக சிரித்தார்.
விஜய் டிவி காப்பாத்துது
70 நாட்கள் ஆகியும் மற்றவர்களிடம் பழக தனக்கு கூச்சமாக இருக்கு என கடந்த வாரம் தான் பிக் பாஸ் ரசிகர் போன் காலில் ஆஜீத் பேசி மொக்கை வாங்கினார். இந்நிலையில், தற்போது பாலா மற்றும் ரம்யாவுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு, 70 நாட்களாக ரசிகர்கள் தான் தன்னை காப்பாற்றி வருகின்றனர் என பேசுவதை கேட்ட ரசிகர்கள், நாங்க உன்னை காப்பாத்தல, விஜய் டிவி தான் காப்பாத்துது என கலாய்த்து வருகின்றனர்.
குரூபிசம் பண்ணிக்கிறேன்
சோலோவா இப்படித்தான் கேம் ஆடணும்னா, நான் குரூப் ஆகிக்கிறேங்க, நான் குரூபிசமே பண்ணிக்கிறேங்க என கேமரா முன்பு பாலா பேசிய அதிரடி புரமோ தற்போது ஆரி ரசிகர்களை ரொம்பவே கடுப்பாக்கி உள்ளது. பாலா ஆரம்பத்தில் இருந்தே குரூப்பில் தான் இருக்கிறார் என்கிற குற்றச்சாட்டை ஜித்தன் ரமேஷே கமல் முன்பு வைத்தாரே என கிழித்துத் தொங்கவிட்டு வருகின்றனர்.
நல்லவனாக நடிப்பு
பாலா கொஞ்சமும் நல்லவனாக மாறவில்லை. டைட்டிலை தட்டித் தூக்க வேண்டும் என்பதற்கு போலி முகமூடியை போட்டு நடித்துக் கொண்டிருக்கிறார் என்றே ஏகப்பட்ட நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பாலாவுக்கு பெஸ்ட் பர்ஃபார்மர் என ஆரி சொன்ன நிலையில், ஷிவானியை வொர்ஸ்ட் என சொன்ன காரணத்திற்காகவே ஆரிக்கு எதிராக பாலா இப்படி பேசுகிறார் என்றும் சுட்டிக்காட்டி உள்ளனர்.