Don't Miss!
- News தோல்வி உறுதி என்றதுமே "ஒப்பாரி" பாட ஆரம்பிச்சிட்டாங்க.. பாஜக வேட்பாளர்களை விமர்சித்த கி.வீரமணி!
- Sports IPL 2024 : "தோனி ஒரு தேசிய ஹீரோ.. என் குழந்தைகளிடம் பெருமையாக சொல்வேன்" மனம் திறந்த நிக்கோலஸ் பூரன்
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Finance நரேந்திர மோடி ஆட்சி மீண்டும் பிடித்தால்.. முதல் வேலையாக 3 அரசு நிறுவன பங்குகளை விற்பது தான்..!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
விபச்சார வழக்கில் கைதான நடிகை ஸ்வேதா பாசு உயிருக்கு தொழிலதிபர்களால் ஆபத்தா?
ஹைதராபாத்: விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ஸ்வேதா பாசு, தன் வாடிக்கையாளர்கள் பெயர்களை வெளியே சொல்லிவிடக்கூடும் என்ற அச்சத்தில் ஆந்திர தொழிலதிபர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே ஸ்வேதா பாசு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஹைதராபாத்திலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் விபச்சாரம் செய்தபோது கையும் களவுமாக கைதானவர் சுவேதா பாசு. தேசிய விருது பெற்ற 23 வயது நடிகையான சுவேதா பாசு, தமிழில் கருணாசுக்கு ஜோடியாக சந்தாமாமா திரைப்படத்திலும் நடித்தவர். எனவே தேசிய அளவில் இந்த கைது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், ஸ்வேதா பாசுவை, ரிமாண்ட் ஹோமில் அடைத்து வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, அவர் வெளியுலக தொடர்பு ஏதுமின்றி தொடர்ந்து ஹோமில் உள்ளார். இந்நிலையில், அவரது வாடிக்கையாளர்களான தொழிலதிபர்களுக்கு கிலி ஏற்பட்டுள்ளது. தங்களது தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கும் ஸ்வேதா பாசு தங்களது பெயரை போலீசாரிடமோ, ஊடகங்களிடமோ தெரிவிக்க வாய்ப்பு உள்ளதாக பழைய வாடிக்கையாளர்கள் பலரும் பயத்தில் உள்ளனராம்.
விபச்சாரத்தில், ஸ்வேதா பாசு காஸ்ட்லியானவர் என்பதால் அவரிடம் பெரும் தொழிலதிபர்கள்தான் வாடிக்கையாளர்களாக இருந்தனர். அவர்களின் பண பலம், அரசியல் பலம் போன்றவை ஸ்வேதா பாசு உயிருக்கே ஆபத்தாக முடியும் என்ற அச்சம் சினிமாத்துறையிலுள்ளோருக்கு ஏற்பட்டுள்ளது.
ஸ்வேதா பாசு விபச்சாரத்தில் ஈடுபட்டதாக மீடியாக்களுக்கு பேட்டியளித்த ஹைதராபாத் போலீசார், அவரது வாடிக்கையாளர்கள் பெயரை இதுவரை வெளியிடவில்லை. எத்தனை முறை மீடியாக்கள் கேட்டாலும் அதை சொல்வதில்லை. எனவே போலீஸ் துறையில் சிலர் நன்கு 'கவனிப்புக்கு' உள்ளாகியிருக்க கூடும் என்று ஆந்திர மீடியாக்கள் கூறுகின்றன. இந்த நிலையில் ஸ்வேதா பாசுவுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்குமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.