Don't Miss!
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
விபச்சார வழக்கில் கைதான நடிகை ஸ்வேதா பாசு உயிருக்கு தொழிலதிபர்களால் ஆபத்தா?
ஹைதராபாத்: விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ஸ்வேதா பாசு, தன் வாடிக்கையாளர்கள் பெயர்களை வெளியே சொல்லிவிடக்கூடும் என்ற அச்சத்தில் ஆந்திர தொழிலதிபர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே ஸ்வேதா பாசு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஹைதராபாத்திலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் விபச்சாரம் செய்தபோது கையும் களவுமாக கைதானவர் சுவேதா பாசு. தேசிய விருது பெற்ற 23 வயது நடிகையான சுவேதா பாசு, தமிழில் கருணாசுக்கு ஜோடியாக சந்தாமாமா திரைப்படத்திலும் நடித்தவர். எனவே தேசிய அளவில் இந்த கைது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், ஸ்வேதா பாசுவை, ரிமாண்ட் ஹோமில் அடைத்து வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, அவர் வெளியுலக தொடர்பு ஏதுமின்றி தொடர்ந்து ஹோமில் உள்ளார். இந்நிலையில், அவரது வாடிக்கையாளர்களான தொழிலதிபர்களுக்கு கிலி ஏற்பட்டுள்ளது. தங்களது தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கும் ஸ்வேதா பாசு தங்களது பெயரை போலீசாரிடமோ, ஊடகங்களிடமோ தெரிவிக்க வாய்ப்பு உள்ளதாக பழைய வாடிக்கையாளர்கள் பலரும் பயத்தில் உள்ளனராம்.
விபச்சாரத்தில், ஸ்வேதா பாசு காஸ்ட்லியானவர் என்பதால் அவரிடம் பெரும் தொழிலதிபர்கள்தான் வாடிக்கையாளர்களாக இருந்தனர். அவர்களின் பண பலம், அரசியல் பலம் போன்றவை ஸ்வேதா பாசு உயிருக்கே ஆபத்தாக முடியும் என்ற அச்சம் சினிமாத்துறையிலுள்ளோருக்கு ஏற்பட்டுள்ளது.
ஸ்வேதா பாசு விபச்சாரத்தில் ஈடுபட்டதாக மீடியாக்களுக்கு பேட்டியளித்த ஹைதராபாத் போலீசார், அவரது வாடிக்கையாளர்கள் பெயரை இதுவரை வெளியிடவில்லை. எத்தனை முறை மீடியாக்கள் கேட்டாலும் அதை சொல்வதில்லை. எனவே போலீஸ் துறையில் சிலர் நன்கு 'கவனிப்புக்கு' உள்ளாகியிருக்க கூடும் என்று ஆந்திர மீடியாக்கள் கூறுகின்றன. இந்த நிலையில் ஸ்வேதா பாசுவுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்குமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
-
Godzilla x Kong: The New Empire Review: காட்ஸில்லா அண்ட் காங் விமர்சனம்.. ஆர்ஆர்ஆர் மாதிரி இருக்கே!
-
Rajinikanth: தமிழ் புத்தாண்டில் ரஜினி படங்களின் அடுத்தடுத்த அப்டேட்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!
-
சீதனமாக சொகுசு கார்.. ரோபோ சங்கர் மனசே மனசு.. இந்திரஜாவின் திருமண பரிசு இவ்ளோ காஸ்ட்லியா?