சென்னை மண்டல தணிக்கை அதிகாரி மதியழகனுக்கு எதிராக போராட்டம்
கன்னா பின்னா படத்துக்கு யு சான்றிதழ் வழங்க மறுத்த தணிக்கைக் குழு அதிகாரியைக் கண்டித்து இன்று அப்படத்தின இயக்குநர் மற்றும் குழுவினர் போராட்டம் நடத்தினர்.

சென்னை சாஸ்திரி பவன் முன்பாக இந்தப் போராட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்தில் அனைவரையும் கைது செய்தனர் போலீசார்.

தணிக்கை அதிகாரி மதியழகன் தணிக்கைச் சான்று வழங்க லஞ்சம் கேட்பதாகவும் இயக்குநர்களை மரியாதைக் குறைவாக நடத்துவதாகவும் குற்றம்சாட்டிய இயக்குநர் தியா, சாஸ்திரி பவன் முன்பாக உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்திருந்தார்.

இதில் படத்திந் தயாரிப்பாளர்கள் ரூபேஷ், சிவசுப்ரமணியன், கேஆர் சீனிவாஸ் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Comments


Click it and Unblock the Notifications