Don't Miss!
- Sports இவருக்கா இந்திய அணியில் இடமில்லை.. பொங்கி எழுந்த ரிஷப் பண்ட்.. அரண்டு போன குஜராத்
- Lifestyle வறுமை நீங்க... செல்வம் பெருக.. துளசியை இந்த திசையில் வையுங்கள்..!
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- News உடல் பருமன் அறுவை சிகிச்சையால் இறந்த மகன்.. முதல்வர் ஸ்டாலினுக்கு தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நான் ஒரு கிறுக்கன்: எஸ்.ஏ. சந்திரசேகர்
Recommended Video
சென்னை: போராட்டம் வேண்டாம் என்று சொன்னால் அது பைத்தியக்காரத்தனம் என்று எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்துள்ளார். புதுமுகம் விக்கி இயக்கியுள்ள இந்த படத்தில் டிராபிக் ராமசாமியாக நடித்துள்ளார் எஸ்.ஏ.சி.
டிராபிக் ராமசாமி இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் பேசிய எஸ்.ஏ.சி. ரஜினிகாந்தை தாக்கி பேசியுள்ளார். எஸ்.ஏ.சி. பேசியதாவது,
படம்
டிராபிக் ராமசாமியை பார்த்தபோது என் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க நீங்க தான் சரியான ஆள் என்றார். அவர் என்னை பற்றி கேள்விப்பட்டுள்ளார். நான் அவர் வேலை செய்வதை அருகில் இருந்து பார்த்து நடித்துள்ளேன்.
கிறுக்கன்
நான் 90 சதவீதம் நல்லவன். நேரத்திற்கு வருவது, சம்பளம் தருவது எல்லாம் சரியாக செய்வேன் என்று பெருமையாக சொல்லிக் கொள்கிறேன். 10 சதவீதம் நான் ஒரு கிறுக்கன். கிறுக்கன் என்றால் சின்ன விஷயத்திற்கு கூட பெரிதாக கோபப்படுவேன். அந்த கோபத்தில் நான் மனிதநேயத்தை கூட மறந்துவிடுவேன். என்னுடன் 17 படங்கள் வேலை செய்தும் என் கோபத்திற்கு ஆளாகாத ஒரே ஆள் இயக்குனர் ஷங்கர் தான்.
குழந்தை
போராட்டம் கூடாது என்று சொல்வது தவறு. போராடாமல் எதுவுமே கிடைக்காது. நாம் குழந்தையாக இருக்கும்போதே அழுதால் தான் பால் கிடைக்கிறது. அழுகிறதே ஒரு போராட்டம் தான். அந்த போராட்டம் வேண்டாம் என்று சொன்னால் எப்படி.
சுதந்திரம்
காந்தியடிகள் போராடவில்லை என்றால் நமக்கு சுதந்திரம் கிடையாது. சுதந்திர நாட்டில் இருக்கிறோமா இல்லையா என்பது வேறு கேள்வி. அதற்கு பதில் சொல்ல முடியாது. மெரினா போராட்டம் தானே நம் கலாச்சாரத்தை மீட்டுக் கொடுத்தது. தூத்துக்குடியில் அத்தனை பேர் உயிர் கொடுத்தது தானே ஒரு ஆலையை மூட வைத்தது. அதனால் போராட்டம் வேண்டாம் என்று சொன்னால் அது பைத்தியக்காரத்தனம். போராடாமல் எதுவுமே கிடையாது. நல்ல விஷயத்திற்கு கண்டிப்பாக போராட வேண்டும். அதை போன்று ஒரு போராட்டமான படம் தான் டிராபிக் ராமசாமி என்றார் எஸ்.ஏ.சி.
தூத்துக்குடி
காலா ரிலீஸுக்கு முன்பு தூத்துக்குடிக்கு சென்ற ரஜினிகாந்த் எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தக் கூடாது என்றார். இந்நிலையில் தான் எஸ்.ஏ.சந்திரசேகர் இப்படி பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.