Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நடிகை கடத்தி மானபங்கப்படுத்தப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
கொச்சி: நடிகை கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து எர்ணாகுளத்தில் மலையாள திரையுலகினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பிரபல நடிகையை அவரது கார் டிரைவரே திட்டமிட்டு கடத்தி, இரண்டு மணி நேரம் பாலியல் தொல்லைக் கொடுத்து, ஆபாசமாக படங்கள் மற்றும் வீடியோ எடுத்துள்ளான்.
இந்த சம்பவத்தால் ஏராளமான இளம் நடிகைகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதைக் கண்டித்து நேற்று எர்ணாகுளத்தில் மம்முட்டி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் எந்தப் பிரபலத்துக்கும் நடக்கலாம். எனவே இனி இப்படிப்பட்ட அசம்பாவிதங்கள் நடைபெறாத வகையில் பெண்களுக்கும், நடிகைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும்படியும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான மம்முட்டி, திலீப், ஜெயசூர்யா, மஞ்சு வாரியார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.