Don't Miss!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- News நாடு முழுக்க மாறுகிறது சம்பளம்.. வருகிறது புதிய ஊதிய திட்டம்.. பணியாளர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்
- Technology ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
மீண்டும் ஆக்க்ஷன் பாதைக்குத் திரும்பும் கோலிவுட்
சென்னை: தமிழ் சினிமாவில் பேய்களின் ஆதிக்கம் குறைந்து பார்ட் 2 படங்களின் மோகம் அதிகரித்து உள்ள நிலையில், மீண்டும் ஆக்க்ஷன் பாதையில் அடியெடுத்து வைத்துள்ளனர் கோலிவுட் படைப்பாளிகள்.
யானும் தீயவன், விழித்திரு, துடி போன்ற ஆக்க்ஷன் படங்களின் வரிசையில் தற்போது புதிதாக இணைந்துள்ளது புகழ். எங்கேயும் எப்போதும், ராஜா ராணி போன்ற படங்களில் அப்பாவியாக நடித்து புகழ் பெற்ற நடிகர் ஜெய், தற்போது புகழ் படத்தின் மூலம் ஆக்க்ஷன் நடிகராக அவதாரம் எடுத்துள்ளார்.
சமீபத்தில் ஜெய் ஆக்க்ஷன் ஹீரோவாக நடித்து வெளிவந்த வலியவன் திரைப்படம் பெரிய அளவில் பேசப்படவில்லை. எனினும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் தற்போது புகழ் படத்தில் நடித்து வருகிறார் ஜெய்.
மற்றவர்களால் நீயெல்லாம் எங்க ஜெயிக்கப் போற என்று அவமானப்படுத்தப்படும் ஒருவனில் நாம் எப்போதும் நம்மைக் கண்டு அவர்கள் ஜெயிக்க வேண்டும், என்று சமயங்களில் பிரார்த்திப்போம் அல்லவா? அந்த மாதிரி ஒரு நபரின் கதைதான் புகழாம்.
படத்தில் ஜெய்க்கு இவன் வேற மாதிரி மற்றும் வேலை இல்லாப் பட்டதாரி போன்ற படங்களில் நடித்த சுரபியை ஜோடியாக்கியுள்ளனர்.
"‘புகழ்' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கி உள்ளது. வெற்றி வேண்டும் என முனைப்போடு செயல் படுகிறோம்" என்கிறார் இயக்குனர் மணிமாறன்.