Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஒரு வாரம் கெடு: இறங்கி வராவிட்டால் வடிவேலுவுக்கு ரெட் கார்டு
Recommended Video
சென்னை: இம்சை அரசன் 24ம் புலிகேசி விஷயத்தில் ஒரு முடிவு எடுக்க வடிவேலுவுக்கு ஒரு வாரம் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாம்.
இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகமான 24ம் புலிகேசி படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூன் மாதம் துவங்கியது. படம் குறித்த அறிவிப்பு வெளியிட்ட கையோடு ஃபர்ஸ்ட் லுக் ஃபோஸ்டர் எல்லாம் வெளியிட்டனர்.
அதன் பிறகு பிரச்சனை ஏற்பட்டு படம் நின்றுவிட்டது.
நிறுத்தம்
படப்பிடிப்பு துவங்கிய 10 நாட்களில் இயக்குனர் சிம்புதேவனுக்கும், வடிவேலுவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு படப்பிடிப்பு நின்றது. இதையடுத்து வடிவேலு படத்தை விட்டு வெளியேறினார்.
புகார்
வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் வடிவேலுவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. மேலும் ரூ. 1 கோடி கொடுத்தால் படத்தில் நடிப்பதாக வடிவேலு தெரிவித்துள்ளாராம். இதை படத்தின் தயாரிப்பாளரான ஷங்கர் எதிர்பார்க்கவில்லையாம்.
ஷங்கர்
வடிவேலு படத்தை விட்டு விலகியதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் ரூ. 9 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று ஷங்கர் கூறியிருந்த நிலையில் வடிவேலு மேலும் ரூ. 1 கோடி சம்பளம் கேட்டுள்ளார்.
முடிவு
தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவுக்கு ஒரு வார காலம் அவகாசம் அளித்துள்ளதாம். எந்த நிபந்தனையும் விதிக்காமல் படத்தில் நடிக்க வேண்டும் அல்லது ரூ. 9 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் இதில் ஏதாவது ஒன்றை செய்யாவிட்டால் அவருக்கு ரெட் கார்டு வழங்கப்படுமாம்.