Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வேதாளம் கன்னட ரீமேக் ரிலீஸ் எப்போது?
சென்னை: அஜித்தின் பிளாக் பஸ்டர் மூவிகளில் ஒன்றான வேதாளம், கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளது. புனித் ராஜ்குமார் ஹீரோவாக நடிக்க உள்ளார் . படம் இவ்வாண்டு இறுதி அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் ரீலீஸ் செய்யப்பட உள்ளது.
சென்ற ஆண்டு தமிழ் சினிமாவின் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் என புகழப்பட்ட திரைப்படம் வேதாளம். சிறுத்தை சிவா இயக்கத்தில், ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் தீபாவளிக்கு திரை கண்ட திரைப்படம் வேதாளம். தமிழ் சினிமா வரலாற்றில், முதல் நாள் வசூலில் புது சாதனை படைத்து ரூ.15.5 கோடியை வசூலித்து அசத்தியது.
100 கோடி ரூபாய் கிளப்பிலும், வேதாளம் சேர்ந்துவிட்டது. சினிமா விமர்சகர்கள், இது வழக்கமான மசாலா கதை என இடித்துரைத்தாலும், மழைக்கு நடுவேயும், ரசிகர்கள் வரவேற்பை பெற்று படம் ஹிட் அடித்தது.
புனித் ராஜ்குமார் கைவசம் தற்போது 2 படங்கள் இருப்பதால், இவ்வாண்டு இறுதி அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் படம் ரிலீசாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பெங்களூர், மைசூர் உள்ளிட்ட கர்நாடகாவின் நகர்ப்பகுதிகளில் வேதாளம் நேரடி தமிழ்படமாகவே பல கன்னட ரசிகர்களால் கண்டுகழிக்கப்பட்டுள்ளது. எனவே ஓராண்டு கழித்து ரீமேக் படத்தை ரிலீஸ் செய்வது பொருத்தமாக இருக்கும் என்று ராஜ்குமாரின் மகனும், படத்தின் ஹீரோவுமான புனித் ராஜ்குமார் கருதுகிறாராம். தனக்குரிய மாஸ் கதாப்பாத்திரத்திற்கு வேதாளம் கதை ஒத்துப்போகும் என்பது புனித்தின் விருப்பத்திற்கு காரணமாம்.