Just In
- 18 min ago
பாஜக சார்பில் போட்டியிடுகிறேனா? எனக்கு அரசியல்னா என்னன்னே தெரியாதே.. பிரபல நடிகை பளிச்!
- 51 min ago
இவ்ளோ க்ளோஸ் ஆகாதும்மா.. விக்னேஷ் சிவனுடன் ஓவர் நெருக்கத்தில் நயன்தாரா.. காண்டாகும் ரசிகர்கள்!
- 1 hr ago
திரும்பிச் செல்லுங்கள்.. படப்பிடிப்பில் விவசாயிகள் மீண்டும் ஆர்ப்பாட்டம்.. ஷூட்டிங் கேன்சல்!
- 1 hr ago
குருவாயூரில் சாமி தரிசனம் செய்த சோம்.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் முதன்முறையாக வெளியிட்ட வீடியோ!
Don't Miss!
- Sports
அதே தப்பு.. இவ்ளோ காசை வேஸ்ட் பண்ணிட்டீங்களே.. சிக்கலில் சிஎஸ்கே.. கடுப்பில் ரசிகர்கள்!
- News
சீனா அத்துமீறினால்.. ஆக்ரோஷமான பதிலடி கொடுக்க தயார்.. விமானப்படை தளபதி பதாரியா திட்டவட்டம்
- Finance
Budget 2021.. ஹெல்த்கேர் துறையில் ஒதுக்கீடு 40% வரை அதிகரிக்கலாம்.. எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?
- Lifestyle
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
- Automobiles
தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்.. எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
'உறுமீன்' படத்தில் புறநானூற்றுப் பாடல்!
பொருளாதார குற்றப் பின்னணியை மையப்படுத்தி உருவாகி வரும் உறுமீன் படத்தில், புறநானூற்று வரிகளை வைத்து ஒரு பாடல் உருவாக்கியுள்ளார்கள்.
ஜீரோரூல்ஸ் எண்டர்டைன்மெண்ட் தயாரிப்பில் டாக்டர் சிவபாலன் தயாரிக்கும் படம் உறுமீன். இப்படத்தை சக்திவேல் பெருமாள்சாமி இயக்குகிறார்.
சூதுகவ்வும், நேரம், ஜிகர்தண்டா படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சிம்ஹா கதாநாயனாக நடிக்கிறார். இவர்களுடன் புதுமுக நடிகை ஆராதனா, காளி, அனுபமா குமார், கலையரசன், மூடர்கூடம் மகேஷ்வரன், ஆண்டனிதாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

ஒரு முன்னணி கதாநாயகர் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். அச்சு இசையமைக்கிறார்.
படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, பாண்டிச்சேரி, கோவை, கேரளா, ஹைதராபாத், பெங்களூர், புனே ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.

படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' புறநானுற்றின் 13 வரிகளை மையப்படுத்தி வித்தியாசமான முறையில் இசையமைக்கப்பட்டுள்ளது. மும்பையில் பிரபல ஸ்டுடியோ ஒன்றில் இப்பாடல் பதிவு செய்யப்பட்டது.
இத் திரைப்படம் 1990 - 2014 வரை தமிழ்நாட்டில் நடைபெற்ற பல்வேறு பொருளதார குற்றங்களின் விசாரணகள், நடப்புகள் மற்றும் குற்றப் பின்னணியை மையப்படுத்தி ஒரு ஆக்ஷன் திரில்லராக உருவாக்கப்படுகிறது.
அப்போ, அமலாக்கப் பிரிவெல்லாம் வருமே... பக்கா அரசியல் படம்னு சொல்லுங்க!