Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
யாஷை மனம் திறந்து பாராட்டி அல்லு அர்ஜுன்… என்ன சொன்னார் தெரியுமா?
சென்னை : ஒருவரை பாராட்டவும் நல்லமனசு வேணும்னு சொல்லுவாங்க அந்த மனுசு நம்ம டோலிவுட் ஸ்டார் அல்லு அர்ஜூனுக்கு நிறையவே இருக்குனு அவரது ரசிகர்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் அல்லு அர்ஜுன்.
கேஜிஎப்-2 கொடுத்த சூப்பர் டூப்பர் வெற்றி...3-வது பாகம் பற்றி தயாரிப்பாளர் சொன்ன சூப்பர் தகவல் இதோ
இவர் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான புஷ்பா திரைப்படம் இந்தியா முழுவதும் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்து. அல்லு அர்ஜுனின் புகழை உலகம் அறிய செய்தது.
புஷ்பா
அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா தி ரைஸ். இந்த படம் தெலுங்கு மொழியில் மட்டுமல்லாது தமிழ், கன்னடம் மற்றும் ஹிந்தி என பான் இந்தியா முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டு பாக்ஸ் ஆஃபீஸில் வசூலை வாரிக் குவித்தது. இந்த படத்தில் அல்லு அர்ஜுனின் நடிப்பும், பேச்சும் தூள் கிளப்பி இருக்கும்.
பான் ஸ்டார்
படம் முழுக்க தோள்பட்டையை இறக்கிக் கொண்டு இவர் பேசிய வசனத்திற்கே ஏகப்பட்ட இளசுகள் இவர் பின்னால் சுற்ற ஆரம்பித்து விட்டார்கள். டோலிவுட்டை வளைத்து போட்டிருந்த அல்லு அர்ஜூன் தற்போது பான் ஸ்டாராகி உள்ளார். புஷ்பா முதல் பாகத்தின் வெற்றியை அடுத்து இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
யாஷின் மிரட்டலான நடிப்பு
இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜூன் தனது ட்விட்டரில், கே.ஜி.எஃப் 2 படக்குழுவுக்கு வாழ்த்துகள் கூறியுள்ளார்.அதில், யாஷ் நடிப்பு மிரட்டலாக இருந்தது. சஞ்சய் தத், ரவீணா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி உட்பட அனைவரும் நடிகர்களின் நடிப்பும் ஈர்க்கும்படி இருந்தது. பின்னணி இசையும் ஒளிப்பதிவும் அருமை. படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். இயக்குநர் பிரசாந்த் நீல், கேஜிஎஃப் படத்தை சிறப்பாக படமாக்கி இருக்கிறார். சிறந்த சினிமா அனுபவத்தைத் தந்ததற்காகவும் இந்திய சினிமா கொடியை உயரத்தில் பறக்க விட்டதற்காகவும் நன்றி என்று கூறியுள்ளார்.
மிகவும் நன்றி
அல்லு அர்ஜூனின் பாராட்டுக்கு நன்றி தெரிவித்துள்ள யாஷ், நன்றி அல்லு அர்ஜூன், உங்களின் கடின உழைப்பு மற்றும் நம்பிக்கையை நான் பாராட்டுகிறேன். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள் என்று யாஷ் ரீட்விட் செய்துள்ளார்.
அவரால் மட்டுமே முடியும்
இவர் இருவரது பதிவை பார்த்த ரசிகர்கள், ஒரு நடிகரே மற்றொரு நடிகரை பாராட்டுவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும். இப்படி மனம் திறந்து பாராட்ட அல்லு அர்ஜூனால் மட்டும்தான் முடியும் என்றும் ரசிகர்கள் இணையத்தில் கமெண்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?