Don't Miss!
- News உ.பி. நிழல் உலக தாதா முக்தார் அன்சாரி.. சிறையில் விஷம் கொடுத்ததால் மாரடைப்பா? வெடிக்கும் சர்ச்சை!
- Finance இனி சுங்கச் சாவடிகளில் நிற்க வேண்டியதில்லை! வருகிறது ஜிபிஎஸ் தொழில்நுட்பம்..!
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Sports வீடியோ- கட்டி பிடிக்க வந்த மலிங்கா.. தள்ளி விட்ட ஹர்திக் பாண்டியா..மும்பை அணியில் என்ன தான் நடக்குது
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
2 நாளில் ரூ.100 கோடி வசூல்... அல்லு அர்ஜுன் கேரியரில் சிறப்பான முதல் படம்!
ஐதராபாத் : நடிகர் அல்லு அர்ஜூன், பகத் பாசில் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகியுள்ள படம் புஷ்பா.
Recommended Video
இந்தப் படத்தை சுகுமார் இயக்கியுள்ளார். படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது.
ரொம்ப அவமானமா இருக்கு சார்...எதற்காக பிரியங்கா இப்படி சொன்னார் ?
இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டு நாட்களின் கலெக்ஷன் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புஷ்பா படம்
நடிகர் அல்லு அர்ஜூன், பகத் பாசில் மற்றும் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் புஷ்பா. சுகுமார் இயக்கியுள்ள இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள நிலையில் முதல் பாகம் தற்போது வெளியாகியுள்ளது.
மிகுந்த எதிர்பார்ப்பு
மரக்கடத்தல் மற்றும் அதைத்தொடர்ந்து சாதாரண ஆள் டான் ஆக மாறுவது என்ற கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளான இந்தப் படம் தற்போது கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
பாடலுக்கு சமந்தா நடனம்
படத்தில் சமந்தா அல்லு அர்ஜூனுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளதும் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. இந்தப் பாடல் கண்டனத்திற்கு உள்ளானதுடன் பாடலின்மீது வழக்கும் போடப்பட்டுள்ளது. ஆண்களுக்கு எதிராக இந்தப் பாடல் அமைந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கலவையான விமர்சனங்கள்
இந்நிலையில் படத்தின் முதல்பாதி சிறப்பாக இருந்ததாகவும் இரண்டாம் பாகம் சிறிது மொக்கையாக நகர்வதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆயினும் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தியில் வெளியான இந்தப் படம் வசூல் மழையை பொழிந்து வருகிறது.
ரூ 100 கோடி க்ளப்பில் இணைந்தது
முதல் நாளிலேயே 40 கோடியை உலகளவில் வசூல்செய்த இந்தப் படம் இரண்டு நாட்களிலேயே 100 கோடி க்ளப்பில் இணைந்துள்ளது. இதையொட்டி தயாரிப்பு தரப்பு தற்போது மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளது. முன்னதாக அல்லு அர்ஜூனின் படங்களின் வசூல் சாதனையை புஷ்பா படம் தற்போது முறியடித்துள்ளது.
71 கோடி ரூபாய் வசூல்
படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தபோதிலும் வசூலில் சாதனை புரிந்து வருகிறது. படம் முதல் நாளில் 40 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக கூறப்படும் நிலையில் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் முதல் நாளிலேயே உலகளவில் 71 கோடி ரூபாயை படம் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.