Actress Seetha : எனக்காக அவரு இது செஞ்சாரு...நெகிழ்ந்து போன நடிகை சீதா!

சென்னை : 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சீதா, இந்த காலத்து இளசுகளை போல சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக பல வீடியோகளை வெளியிட்டு வருகிறார்.

ஆண்பாவம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சீதா, உன்னால் முடியும் தம்பி, வெற்றி மேல் வெற்றி, மருதுபாண்டி, குரு சிஷ்யன் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இருக்கிறார்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிப்படங்களிலும் நடித்து அனைத்து மொழி ஆடியன்சுக்கும் தெரிந்த முகமானார் நடிகை சீதா.

நடிகை சீதா

நடிகை சீதா

80களில் ஷிப்ட் போட்டு நடிக்கும் அளவுக்கு பிஸியான நடிகையாக இருந்த சீதா, முதல் முறையாக பார்த்திபன் இயக்கி நடித்த புதிய பாதை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆரம்பத்தில் படத்தில் நடிக்கவில்லை என்று கூறி சீதா, தந்தையின் வற்புறுத்தலினால் புதிய பாதை படத்தில் நடித்தார். இந்த படத்தில் நடித்துக்கொண்டு இருந்த போது பார்த்திபன் சீதா இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

பார்த்திபனை மணந்தார்

பார்த்திபனை மணந்தார்

சீதாவின் வீட்டில் இவர்களுடைய காதலை ஏற்றுக் கொள்ளாததால் வீட்டை விட்டு வெளியேறி நடிகர் பார்த்திபனை 1989 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சீதா பார்த்திபன் தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்த நிலையில், ஒரு ஆண் குழந்தையை தத்து எடுத்து வளர்ந்து வந்தனர். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி குடும்பத்தை கவனித்துக் கொண்டார்.

இரண்டாவது திருமணம்

இரண்டாவது திருமணம்

இதையடுத்து 2001ம் ஆண்டு பார்த்திபன் சீதா இருவருக்கும் கருத்து வேறுபாடு இருவரும் விவாகரத்து பெற்று பிரித்தனர். விவாகரத்து ஆனபிறகு மீண்டும் நடிக்க துவங்கினார். ஆனால், பட வாய்ப்பு கிடைக்காததால், சீரியலில் நடித்தார். அப்போது சீரியல் நடிகர் சதீஷை தனது 43வது வயதில் காதலித்து திருமணம் செய்து இருக்கிறார். ஆனால், அந்த வாழ்க்கையும் பாதியில் முறிந்து போனதால், தன்னுடைய தாயாருடன் தனியாக வசித்து வருகிறார்.

எனக்காக அவரு இது செஞ்சாரு

எனக்காக அவரு இது செஞ்சாரு

தற்போது, நடிகை சீதா, பல இளம் நடிகையைப் போல சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார். வீட்டியில் மாடித்தோட்ட வளர்ப்பது, இயற்கையோடு பொழுதை கழிப்பது, நாய், பூனை, ஆடு குட்டிகளுடன் விளையாடி வருகிறார். தற்போது சீதா ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், காரில் தூத்துக்குடிக்கு சென்று கொண்டிருக்கும் சீதா, பிரபாகர் அவர்களை பாடவைத்துள்ளார். அவரும் ரொம்ப அழகான ஒரு பாடலை பாடி இருக்கிறார். இந்த பாட்டை கேட்ட சீதா ரொம்ப அருமையான குரல், நல்ல பாட்டு இந்த பயணம் நன்றாக இருந்தது தூத்துக்குடி போகிறவரைக்கும் பிரபாகரன் எனக்காக இந்த பாடலை பாடினார் என்று நடிகை சீதா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X