முன்னணி மல்டிபிளக்ஸ் நிறுவனங்களான பிவிஆர் - ஐநாக்ஸ் இணைய காரணம் என்ன?
புதுடெல்லி : பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் ஒன்றாக இணைந்துள்ளன.

நாட்டின் மிகப்பெரிய மல்டிபிளக்ஸ் திரையரங்கு நிறுவனங்களான பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் நிறுவனங்களின் இயக்குநர்கள் குழுக் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் இரு நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் ஆகிய இரு நிறுவனங்களையும் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், ஒருங்கிணைந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக அஜய் பிஜிலியும், செயல் இயக்குநராக சஞ்சீவ் குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இரு நிறுவனங்கள் இணைந்த நிலையில், தற்போது இந்த திரையரங்குகள் அனைத்தும் பிவிஆர் ஐநாக்ஸ் லிமிடெட் என்ற பெயரில் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் அதிக அளவில் இருந்தாலும் ஓடிடி தளங்களில் வரவு காரணமாக திரையரங்குகளில் பாடம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைத்துள்ளது. இந்தி மற்றும் ஆங்கில பாக்ஸ் ஆபிஸில் 70% வசூலாகும் நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கில் 9% சந்தைப் பங்கு மட்டுமே வசூலாகிறது.

PVR ஐ விட Inox இன் வசூல் அதிகமாக இருக்கும், மேலும் அவை EV-EBITDA க்கு ஒரு வருடத்திற்கு 15, 15.5 மடங்கு அதிகமாக வசூலாகும். ஐநாக்ஸைப் பொறுத்தவரை, PVR ஐ விட அதிகமாக வசூலாகும். ஐநாக்ஸ் ரூ. 17,000 கோடிக்கு வருவாய் வருகிறது. ஆனால் இப்போது இரு நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து உள்ளதால் ரூ. 23,000, 24,000 கோடி அல்லது 3 பில்லியன் டாலர்களை நோக்கி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் பெருமளவு லாபம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
பிவிஆர் நிறுவனத்திற்கு 73 நகரங்களில் 871 திரையரங்குகளும், ஐநாக்ஸ் நிறுவனத்திற்கு 72 நகரங்களில் 675 திரையரங்குகளும் செயல்பட்டு வருகின்றன. கொரோனா காலகட்டத்தில் இரு நிறுவனங்களும் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது இரு நிறுவனமும் இணைந்து செயல்பட உள்ளது.


Click it and Unblock the Notifications











