Don't Miss!
- News திமுக வேட்பாளர் செல்வகணபதி வேட்பு மனு நிறுத்தி வைப்பு.. பரபரக்கும் சேலம்.. என்ன நடந்தது?
- Lifestyle உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- Finance ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு மதிப்பு 54% உயரும்.. அமெரிக்க நிறுவனத்தின் பலே கணிப்பு..!
- Technology வந்துடுச்சு.. இந்த Samsung போனுக்கு பல பேர் வெயிடிங்.. 2 50MP கேமரா, 120Hz டிஸ்பிளே, IP67 ரேட்டிங், 5G ஆதரவு!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Automobiles சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- Sports அங்க உயிரைக் கொடுத்து விளையாடுறாங்க.. ஒரு கேப்டனா நீ என்ன பண்ணிருக்கனும்.. ஹர்திக்கை பொளந்த பதான்!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
கோச்சடையானுக்குப் பின் ராணாவைக் கையிலெடுக்கிறார் ரஜினி - கேஎஸ் ரவிக்குமார் தகவல்
கோச்சடையானுக்குப் பிறகு கேவி ஆனந்த் இயக்கத்தில் ரஜினி நடிப்பார் என்றார்கள். இதனை ஈராஸ் நிறுவனமும் அறிவித்தது.
ஆனால் கே வி ஆனந்த் இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மீண்டும் ராணா பற்றிய பேச்சுகள் கிளம்பியுள்ளன.
ராணா படம் மட்டும் எடுக்கப்பட்டால், தமிழ் சினிமாவின் உச்சகட்ட பொழுதுபோக்குப் படமாக அமையும் என ரஜினியே தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.
இப்போது படம் குறித்து கேஎஸ் ரவிக்குமாரும் பேசியுள்ளார். படத்தின் இயக்குநர் இவர்தான்.
தனது அடுத்த படங்கள் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "கோச்சடையான்' முடிந்த பிறகு 'ராணா' ஆரம்பிப்பது குறித்து பேசலாம்னு ரஜினி சார் சொல்லிட்டார்.
'பஞ்சதந்திரம் பார்ட் 2'னு பேச்சு வந்தது. ஆனா, அதிகாரபூர்வமா கமல் சார் தரப்பில் இருந்து யாரும் பேசலை," என்றார்.
கேஎஸ் ரவிக்குமார் இப்போது சாமி படத்தை இந்தியில் ரீமேக் செய்து கொண்டிருக்கிறார். அந்தப் படம் முடிந்ததும் வடிவேலு படத்தை எடுக்கிறார். பின்னர்தான் ராணாவைத் தொடங்குவார்கள் என்று தெரிகிறது.