Don't Miss!
- Finance 7.50 லட்சம் கோடி ரூபாயை நிதி திரட்டும் மத்திய அரசு.. எதற்காக தெரியுமா..?
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
தர்மபுரி கலவரமா 'கௌரவம்'? - ராதா மோகன் விளக்கம்
பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் சிரிஷ், யாமி குப்தா நடிக்கும் படம் கௌரவம். ராதா மோகன் இயக்குகிறார்.
இந்தப் படத்தின் கதை, தர்மபுரியில் சமீபத்தில் நடந்த கலப்பு திருமண மோதலை மையமாகக் கொண்டது என்று கூறப்படுகிறது. இதனால் இப்படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பிட்ட சமுதாயத்தினரை இழிவுபடுத்தும் காட்சிகள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளதாகக் கூறி, கொடி பிடிக்க ஆரம்பித்துவிட்டனர்.
இந்தப் படத்துக்கு கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவை என்ற சாதிக் கட்சியின் தலைவரான பொங்கலூர் ரா.மணிகண்டன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கலப்பு திருமணத்துக்கு எதிராக கௌரவ கொலைகள் போன்ற செயல்களில் ஈடுபடுவது போன்றும் சாதி, மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தியும் வன்முறைகளை தூண்டிவிடும் வகையிலும் காட்சிகள் உள்ளதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து இயக்குநர் ராதாமோகன் கூறுகையில், "கௌரவம் படத்தை தர்மபுரி கலவரத்தை அடிப்படையாக வைத்து எடுத்திருப்பதாகக் கூறப்படுவது தவறு. வேண்டுமானால் சம்பந்தப்பட்டவர்களுக்கு இந்தப் படத்தை ரிலீசுக்கு முன்பே காட்டத் தயார்," என்றார்.