Don't Miss!
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ஜாமீன் மனுதான் தள்ளுபடியாகிடுச்சே, இன்னும் ஏன் பைசூலை கைது செய்யல? - 'குடாயும்' ராதா
சென்னை: சென்னை போலீசாருக்கு பெரும் குடைச்சலாக மாறியுள்ளார் சுந்தரா டிராவல்ஸ் ராதா.
சினிமா பைனான்சியர் பைசூலின் ஜாமீன் மனு மூன்று முறை தள்ளுபடி ஆகியும் கைதாகாமல் இருப்பது ஏன் என தொடர்ந்து அவர் கேள்வி எழுப்பி வருகிறார்.
சுந்தரா டிராவல்ஸ், அடாவடி, மானஸ்தன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ராதா. இவர், தொழிலதிபரும், சினிமா பைனான்சியருமான பைசூல் மீது செக்ஸ் மற்றும் பண மோசடி புகார் அளித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த பைசூல், போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து தற்போது தலைமறைவாக உள்ளார். தலைமறைவாக உள்ள பைசூல் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.
இந்நிலையில் நிருபர்களை சந்தித்த நடிகை ராதா, ''பைசூல் ஜாமீன் மனுக்கள் மூன்று முறை நீதிமன்றத்தில் தள்ளுபடியாகி விட்டன. அதன் பிறகும் அவர் கைது செய்யப்படாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. சில முக்கிய புள்ளிகள் பைசூலுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளனர். அவர்கள் யார் என்ற விபரங்களை விரைவில் வெளியிடுவேன்.
பல்வேறு பெண்கள் அமைப்பினர் என்னை தொடர்பு கொண்டு ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர். சட்டத்தை ஏமாற்றி தலைமறைவாக இருக்கும் பைசூலை போலீசார் உடனே கைது செய்ய வேண்டும். என்னிடம் இருந்து அபகரித்த ரூ.50 லட்சத்தையும் மீட்டு தர வேண்டும்," என்றார்.
கடந்த மூன்று நாட்களில் நான்காவது முறையாக மீடியாவைச் சந்தித்து புகார் கூறியுள்ளார் ராதா.