twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜாமீன் மனுதான் தள்ளுபடியாகிடுச்சே, இன்னும் ஏன் பைசூலை கைது செய்யல? - 'குடாயும்' ராதா

    By Shankar
    |

    சென்னை: சென்னை போலீசாருக்கு பெரும் குடைச்சலாக மாறியுள்ளார் சுந்தரா டிராவல்ஸ் ராதா.

    சினிமா பைனான்சியர் பைசூலின் ஜாமீன் மனு மூன்று முறை தள்ளுபடி ஆகியும் கைதாகாமல் இருப்பது ஏன் என தொடர்ந்து அவர் கேள்வி எழுப்பி வருகிறார்.

    radha and faizul

    சுந்தரா டிராவல்ஸ், அடாவடி, மானஸ்தன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ராதா. இவர், தொழிலதிபரும், சினிமா பைனான்சியருமான பைசூல் மீது செக்ஸ் மற்றும் பண மோசடி புகார் அளித்துள்ளார்.

    இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த பைசூல், போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து தற்போது தலைமறைவாக உள்ளார். தலைமறைவாக உள்ள பைசூல் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.

    இந்நிலையில் நிருபர்களை சந்தித்த நடிகை ராதா, ''பைசூல் ஜாமீன் மனுக்கள் மூன்று முறை நீதிமன்றத்தில் தள்ளுபடியாகி விட்டன. அதன் பிறகும் அவர் கைது செய்யப்படாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. சில முக்கிய புள்ளிகள் பைசூலுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளனர். அவர்கள் யார் என்ற விபரங்களை விரைவில் வெளியிடுவேன்.

    பல்வேறு பெண்கள் அமைப்பினர் என்னை தொடர்பு கொண்டு ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர். சட்டத்தை ஏமாற்றி தலைமறைவாக இருக்கும் பைசூலை போலீசார் உடனே கைது செய்ய வேண்டும். என்னிடம் இருந்து அபகரித்த ரூ.50 லட்சத்தையும் மீட்டு தர வேண்டும்," என்றார்.

    கடந்த மூன்று நாட்களில் நான்காவது முறையாக மீடியாவைச் சந்தித்து புகார் கூறியுள்ளார் ராதா.

    English summary
    Actress Radha again questioned why the police not arrested Faizul, who's bail petition was cancelled.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X