Don't Miss!
- News லாட்ஜ்ஜில் யாரது? இங்கே என்ன வேலை? உடனே வெளியேறுங்க.. சென்னையில் சாட்டையை சுழட்டும் போலீஸ் - அதிரடி
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயங்களை உங்க மனைவியிடம் நீங்க சொன்னா உங்களால் நிம்மதியாவே வாழ முடியாதாம்...!
- Sports IPL 2024 : ஒரு சம்பவம்.. 3 அணிகளின் சோலியும் முடிஞ்ச்.. அம்பானியை கிண்டல் செய்யும் சிஎஸ்கே ஃபேன்ஸ்!
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ராதாரவி எப்பவுமே அப்படித் தான்: சின்மயி புகார்
Recommended Video
சென்னை: தான் பாலியல் புகார் தெரிவித்ததால் தான் டப்பிங் கலைஞர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக பாடகி சின்மயி தெரிவித்துள்ளார். யார் பேசினாலும் ராதாரவி அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார் என்கிறார் சின்மயி.
இசை நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்றுள்ளார் பாடகி சின்மயி. இந்நிலையில் திரைப்பட டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து சின்மயி கூறியிருப்பதாவது,
டப்பிங் சங்கம்
நான் மீ டூ தொடர்பாக குரல் கொடுக்கத் துவங்கியதால் தான் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கியுள்ளனர். யார் பேசினாலும் உடனே ராதாரவி(டப்பிங் கலைஞர்கள் சங்க தலைவர்) அவர்களை நீக்கிவிடுவார். இது பல முறை நடந்துள்ளது. நான் 2006ம் ஆண்டில் இருந்து டப்பிங் பேசி வருகிறேன்.
இசை நிகழ்ச்சி
தேர்தல் பற்றி எனக்கு எப்பொழுதுமே தெரிவித்தது இல்லை. கண்டன பேரணியில் கலந்து கொள்வதற்காக நான் முன்பணம் வாங்கிய இசை நிகழ்ச்சி ஒன்றை ரத்து செய்ய வைத்தார் ராதாரவி. பேரணியில் கலந்து கொள்ளாவிட்டால் ரெட் கார்டு கொடுப்பேன் என்றார் அவர். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ் திரையுலகினர் போராட்டம் நடத்தியபோது வருகைப்பதிவேடு வைத்திருந்தனர்.
வேலை
போராட்டங்களுக்கு வராதவர்களுக்கு வேலை கிடையாது. இல்லை என்றால் ஹபிபுல்லா சாலையில் இருந்த டப்பிங் யூனியன் அலுவலகத்திற்கு வரவழைத்து கண்டபடி திட்டுவார் ராதாரவி. ஆண், பெண் என்று வித்தியாசம் இல்லாமல் கேவலமாக திட்டுவார். நான் ஒரு முறை அப்படி திட்டு வாங்கியபோது என் அம்மாவும் உடன் இருந்தார். சுசித்ராவும் திட்டு வாங்கியுள்ளார். பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதால் நானும், சுசித்ராவும் திட்டு வாங்கினோம். கூட்டம் நடப்பது குறித்து யாருமே எங்களிடம் தெரிவிக்கவில்லை.
சின்மயி
ஒட்டப்பாலத்தில் நடக்கவிருந்த இசை நிகழ்ச்சியை ரத்து செய்ய வைத்தார் ராதாரவி. நான் ராதாரவிக்கு போன் செய்து நிகழ்ச்சியை ஒப்புக் கொண்டது பற்றி தெரிவித்தது எனக்கு நினைவில் உள்ளது. அதற்கு அவரோ, எனக்கும் ஷூட்டிங் இருக்கு. நான் கேன்சல் பண்ணிட்டு வரல? நீ வராட்டா ரெட் கார்டு கொடுப்போம் என்றார். டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டவர்கள் பின்னர் மீண்டும் சேர்க்கப்பட்டால் அவர்களுக்கு வேலை கொடுக்க மாட்டார்கள். அதற்கு உதாரணம் பூமா என்கிறார் சின்மயி.