Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
தவறாக பேசியிருந்தால் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க மாட்டேன்… ராதாரவி அதிரடி!
தவறாக பேசியிருந்தால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என ராதாரவி தெரிவித்தார்
கோவை: தவறாக பேசினால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.
மறக்க முடியுமா கலைஞரை.. என்ற தலைப்பில் திரையுலகினர் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கோவையில் புகழ் வணக்கம் செலுத்தி வருகின்றனர்.
அந்த நிகழ்வில் பேசிய நடிகர் ராதாரவி மனித மலத்தை மனிதனே அல்லும் அவல நிலையைக் கண்டு கொதித்து, அருந்ததியர் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு அளித்தார். வட மாநிலத்தில் சில அமைப்புகள் அம்பேத்கர் பெயரே இந்தியாவில் இருக்கக் கூடாது என முழக்கமிட்டபோது அதை எதிர்த்து அம்பேத்கருக்கு சிலை வைத்தார். என கலைஞரின் சாதனைகளை பட்டியலிட்டார்.
எம்.ஆர்.ராதாவுக்கும் கருணாநிதிக்கும் இடையே இருந்த நட்பை விவரித்தார். தமிழக முதல்வராவதற்கு ஸ்டாலினுக்கு எல்லா தகுதிகளும் இருக்கிறது. ஐம்பது வருட அனுபவம் உள்ளவர் ஸ்டாலின் எனக் கூறிவிட்டு, வீடுகட்டுவதற்கு முட்டு கொடுக்க சவுக்கு மரங்களை பயன்படுத்துவார்கள். வீடு கட்டி முடித்துவிட்டு கிரஹப்பிரவேசம் செய்யும்போது சவுக்கு மரத்தை தூக்கி ஓரமாக போட்டுவிட்டு வாழை மரத்தை வாசலில் கட்டுவார்கள். அதுபோல் உழைத்தவர்களை உதாசீதனப்படுத்தாதீர்கள் எனக் கோரினார்.
இறுதியில், நாம் எல்லோருமே கலைஞரின் குடும்பம்தான் எனக் கூறிய ராதாரவி, இந்த அமைப்பு பிடிக்காதவர்கள் இதிலிருந்து விலகி விடுங்கள் எனக் கூறினார்.
எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, நான் பேசியதில் எதும் தவறில்லை என நினைக்கிறேன், தவறாக பேசியிருந்தால் நிச்சயமாக மன்னிப்பு கேட்கமாட்டேன் என அவருடைய பாணியில் சொல்லிவிட்டு விடைபெற்றுக்கொண்டார்.