Don't Miss!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
“எல்லாப் புண்ணியமும் அவங்களுக்கு தான்”.. நயனுக்கு மறைமுகமாக நன்றி சொன்ன ராதாரவி!
தேர்தல் சமயத்தில் தன்னை அமைதியாக இருக்க வைத்ததற்கு நயன்தாரா தான் காரணம் என நடிகர் ராதாரவி மறைமுகமாக குறிப்பிட்டார்.
Recommended Video
சென்னை: கொரில்லா இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ராதாரவி, நடிகை நயன்தாரா பெயரை மறைமுகமாக குறிப்பிட்டார்.
ஜீவா, ஷாலினி பாண்டே, ராதாரவி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கொரில்லா. இந்த படத்தில் கொரில்லா குரங்கு ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. டான் சாண்டி இப்படத்தை இயக்கியுள்ளார்.
கொரில்லா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ராதாரவி, தேர்தல் சமயத்தில் தன்னை அமைதியாக இருக்க வைத்ததற்கு நயன்தாரா தான் காரணம் என மறைமுகமாக குறிப்பிட்டார்.
நம்ம ஊரில் பூத்த ரோஜா ஆந்திராவில் மனம் வீசுதே..!
எல்லோரும் கொண்டாடுகிறார்கள்
இதுகுறித்து அவர் பேசியதாவது, "இந்த தேர்தலில் யார் வெற்றி பெற்றார்கள், யார் தோற்றார்கள் என்பதே தெரியவில்லை. தோற்றவர்களும் கொண்டாடுகிறார்கள், ஜெயித்தவர்களும் கொண்டாடுகிறார்கள்.
தனிக்கட்சி தொடங்காததற்கு காரணம்
கூட்டம் கூடி மக்கள் கைத்தட்டினால் ஜெயித்துவிடலாம் என சிலர் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை என்பதை தேர்தல் முடிவு காட்டுகிறது. எனவே கூட்டம் கூடுவதை வைத்து யாரும் தனிக்கட்சி தொடங்கக்கூடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அது புரிந்ததால் தான் நான் புதுக்கட்சி தொடங்கவில்லை.
அவங்களுக்கு நன்றி
தேர்தல் சமயத்தில் நான் அமைதியாக வீட்டில் இருந்தபடி வேடிக்கை பார்ப்பது இது தான் முதல்முறை. இந்த வாய்ப்பு வருவதற்கு அவங்க தான் காரணம். அதனால் அவங்களுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்", என்றார்.
நயன்தாரா
ராதாரவி அவங்க எனக் குறிப்பிட்டது நயன்தாராவை தான்.கொலையுதிர் காலம் பட விழாவில் நயன்ராதா குறித்து ராதாரவி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!