Don't Miss!
- News திரும்பும் ஜெகன்! ஆந்திரா சட்டசபை தேர்தல் பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு! மாஜி அமைச்சர்களுக்கு சான்ஸ்
- Sports ஹர்திக் பாண்டியாவை வேண்டுமென்றே பழிவாங்கினார்களா மும்பை வீரர்கள்.. இப்படி மோசமாக விளையாட முடியுமா?
- Lifestyle 54 ஆண்டுகளுக்கு பின் நிகழும் முழு சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது...
- Automobiles ஏப்.1ம் தேதி முதல் சுங்ககட்டணம் உயர்கிறது! எங்கு, எவ்வளவு உயர்கிறது தெரியுமா?
- Finance 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறுமா? அதைப் பற்றி பேசுவது கூட முட்டாள் தனம் - ரகுராம் ராஜன்
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Technology கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
“எல்லாப் புண்ணியமும் அவங்களுக்கு தான்”.. நயனுக்கு மறைமுகமாக நன்றி சொன்ன ராதாரவி!
தேர்தல் சமயத்தில் தன்னை அமைதியாக இருக்க வைத்ததற்கு நயன்தாரா தான் காரணம் என நடிகர் ராதாரவி மறைமுகமாக குறிப்பிட்டார்.
Recommended Video
சென்னை: கொரில்லா இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ராதாரவி, நடிகை நயன்தாரா பெயரை மறைமுகமாக குறிப்பிட்டார்.
ஜீவா, ஷாலினி பாண்டே, ராதாரவி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கொரில்லா. இந்த படத்தில் கொரில்லா குரங்கு ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. டான் சாண்டி இப்படத்தை இயக்கியுள்ளார்.
கொரில்லா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ராதாரவி, தேர்தல் சமயத்தில் தன்னை அமைதியாக இருக்க வைத்ததற்கு நயன்தாரா தான் காரணம் என மறைமுகமாக குறிப்பிட்டார்.
நம்ம ஊரில் பூத்த ரோஜா ஆந்திராவில் மனம் வீசுதே..!
எல்லோரும் கொண்டாடுகிறார்கள்
இதுகுறித்து அவர் பேசியதாவது, "இந்த தேர்தலில் யார் வெற்றி பெற்றார்கள், யார் தோற்றார்கள் என்பதே தெரியவில்லை. தோற்றவர்களும் கொண்டாடுகிறார்கள், ஜெயித்தவர்களும் கொண்டாடுகிறார்கள்.
தனிக்கட்சி தொடங்காததற்கு காரணம்
கூட்டம் கூடி மக்கள் கைத்தட்டினால் ஜெயித்துவிடலாம் என சிலர் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை என்பதை தேர்தல் முடிவு காட்டுகிறது. எனவே கூட்டம் கூடுவதை வைத்து யாரும் தனிக்கட்சி தொடங்கக்கூடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அது புரிந்ததால் தான் நான் புதுக்கட்சி தொடங்கவில்லை.
அவங்களுக்கு நன்றி
தேர்தல் சமயத்தில் நான் அமைதியாக வீட்டில் இருந்தபடி வேடிக்கை பார்ப்பது இது தான் முதல்முறை. இந்த வாய்ப்பு வருவதற்கு அவங்க தான் காரணம். அதனால் அவங்களுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்", என்றார்.
நயன்தாரா
ராதாரவி அவங்க எனக் குறிப்பிட்டது நயன்தாராவை தான்.கொலையுதிர் காலம் பட விழாவில் நயன்ராதா குறித்து ராதாரவி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
Actor Kamal haasan: பிரித்விராஜ் கிட்ட இதை எதிர்பார்க்கலை.. ஆடு ஜீவிதம் படத்தை மணிரத்னத்துடன் பார்த்த கமல்!
-
Actor Simbu: வாழ்க்கை ஒரு வட்டம்டா.. தக் லைஃப் பட விஷயத்தில் உண்மையான வாக்கியம்!
-
Seshu: கடைசியா ரீ-யூனியன் ஷோ ஒன்றை நடத்தி எல்லாரையும் மீட் செய்ய வச்சாரு.. லொள்ளு சபா ஜீவா உருக்கம்!