Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
விஷாலை கழுவிக் கழுவி ஊத்திய ராதாரவியா இப்போ இப்படி சொல்வது?: வியக்கும் கோலிவுட்
சென்னை: தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் போட்டியிடுவதில் தவறு ஏதும் இல்லை என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
சென்னை அண்ணாநகரில் இருக்கும் கந்தசாமி நாயுடு கல்லூரி வளாகத்தில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
ரஜினி, கமல்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாஸன் ஆகியோர் வாக்களித்தனர். நடிகர் ராதாரவியும் வாக்களித்தார். வாக்களித்த பிறகு ராதாரவி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
விஷால்
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் சங்கத்திற்கு நன்மை செய்ய வேண்டும். தேர்தலில் விஷால் போட்டியிடுவதில் தவறு ஏதும் இல்லை என்று ராதாரவி செய்தியாளர்களிடம் கூறினார். இது தான் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
ராதாரவி
நடிகர் சங்க தேர்தலின்போது ராதாரவி விஷாலை கடுமையாக விமர்சித்தார். விஷால் என்றாலே குற்றம் என்றாகிவிட்டது. அவருக்கு அனுபவம் இல்லை என்று எல்லாம் விமர்சித்தார்.
விமர்சனம்
நடிகர் சங்க தேர்தலின்போது விஷாலும், ராதாரவியும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்தனர். இந்த நிலையில் ராதாரவியின் மனமாற்றம் பலரையும் வியக்க வைத்துள்ளது.