Don't Miss!
- News சமூக வலைதள பதிவிற்காக பாஜக மீது எப்ஐஆர் போட்ட இந்திய தேர்தல் ஆணையம்.. அதிர வைத்த காங்கிரஸ்
- Sports டி20 உலக கோப்பை 2024- இந்திய அணியை தேர்வு செய்த இர்பான் பதான்.. தேர்வுக்குழுக்கு சூப்பர் யோசனை
- Lifestyle வறுமை நீங்க... செல்வம் பெருக.. துளசியை இந்த திசையில் வையுங்கள்..!
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பாமக தொகுதியில் குஷ்பு பிரசாரம் செய்தால் ராமதாஸ் ஒத்துழைக்க மாட்டாரா?-ராதாரவி
அதிமுக வேட்பாளர் செந்தூர் பாண்டியனை ஆதரித்து கடையநல்லூர் தொகுதி பண்பொழி, அச்சன்புதூர், வடகரை, காசிதர்மம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட நடிகர் ராதாரவி நேற்று இரவு கடையநல்லூர் பூங்கா அருகில் இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு பேசியதாவது,
நடக்கவுள்ள சட்டசபை தேர்தல் தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் நடக்கும் தேர்தலாகும். அதிமுக இயக்கம் வாழ பிறந்தவர்கள் இயக்கம் என்பதை நிருபித்து காட்டுங்கள்.
என்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட கட்சியின் பொது செயலாளர் ஜெயலலிதா தெரிவித்தார். ஆனால் தி்முக அரசை வீழ்த்துவதற்காக 234 தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய வேண்டுமென்று ஒரே லட்சியத்திற்காக அதனை வேண்டாம் என்று கூறினேன்.
திமுக ஆட்சியில் அனைத்து துறையும் சீரழிந்து விட்டது. அடுத்தவரை வாழவைக்க கூடாது என்ற எண்ணத்தில் ஆட்சி நடத்துபவர் தான் கருணாநிதி.
விஜயகாந்த் படத்தை ரீலிஸ் செய்வதற்கு பிரச்சனை தருகிறார்கள். விஜய் படத்தை வெளியிடவும் பிரச்சனைதான். சினிமாகாரர்கள் அரசியலுக்கு வரகூடாது என்கிறார் பாமக தலைவர் ராமதாஸ். ஆனால் அவர்களது கட்சி தொகுதிக்கு குஷ்பு வந்தால் ஓத்துழைக்க மாட்டார்களா, நெப்போலியன் வந்தால் ஓத்துழைக்க மாட்டார்களா.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன் என்று வடிவேலு தெரிவித்தாரே. அப்படி என்றால் ரிஷிவந்தியத்தில் வடிவேலு நிற்காதது ஏன்.
ஒரு ரூபாய் அரிசி என்று கூறுகிறார்கள். அந்த அரிசியை மாடு கூட தின்ன மறுக்கிறது. ஒரு ரூபாய் அரிசியை கருணாநிதி சாப்பிடுவாரா. 2 ஏக்கர் நிலம் என கூறி அனைவரையும் ஏமாற்றி விட்டார். வாய் வித்தைகளால் அரசியல் ஓட்டுகிறார் கருணாநிதி.
நான் என்றால் உதடுகள் ஓட்டாது. நாம் என்றால்தான் உதடுகள் ஓட்டும் என முதல்வர் கருணாநிதி பொன்மொழி கூறுகிறாராம். கலைஞர் என்றால்தான் உதடுகள் ஓட்டாது, அம்மா என்றால்தான் உதடுகள் ஓட்டும்.
கிரைண்டர், மிக்சி என்று கூறுகிறார்கள். ஆனால் அதற்கான மின்சாரம் எங்கிருந்து தருவார்கள். அதிமுக தேர்தல் அறிக்கை நலிந்த நிலையில் உள்ளவர்களுக்கு சோலார் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அறிவுபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றார் ராதாரவி.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!