Don't Miss!
- News இந்திய பணக்காரர்களில் ஒரு முஸ்லிம்கூட இல்லையே ஏன்? மோடிக்கு காங். கேள்வி
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Automobiles கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நானும் நடிக்கிறேன், நீயும் நடிக்கிறே... ராதாரவி "வார்னிங்"
கரூர்: கரூர் வந்த நடிகர் சங்கத் துணைத் தலைவர் ராதாரவி அங்கு நாடக நடிகர்களிடம் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது நடிகர் சங்கத் தேர்தலில் தங்களை எதிர்த்து பிரசாரம் செய்து வரும் நடிகர் விஷாலுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துப் பேசினார்.
நடிகர்கள் சங்க தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற இருக்கிறது. நடிகர்கள் சங்க தேர்தலில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், நடிகர் நாசர் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகின்றன.
இந்நிலையில், இன்று கரூர் தான்தோன்றிமலை பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சரத்குமார் அணி சார்பில் போட்டியிடும் நடிகர் ராதாரவி நாடக நடிகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். தொடர்ந்து அவர்களிடம் ஆதரவு கேட்டு அவர் பேசினார்.
காப்பாற்றத்தான் நாங்கள்
அப்போது அவர் கூறுகையில், செத்துக்கொண்டிருக்கிறது சினிமா. அதை காப்பாற்றத்தான் தென்னிந்திய நடிகர் சங்கம் உள்ளது.
நாடக நடிகர்கள் முக்கியம்
நடிகர்கள் சங்கம் இருக்கும் வரை அங்கு நாடக நடிகர்கள் முக்கியம். நடிகர் விஷால் அணியினர் தேர்தலுக்கு பிறகு தமிழ்நாடு சினிமா நடிகர்கள் சங்கம் என்று ஒன்றை தொடங்க உள்ளார்கள்.
நாங்கள் என்ன கெளரவர்களா?
நடிகர்கள் சங்க தேர்தல் நடப்பதற்கு முன்னதாக அவர்களை பாண்டவர்கள் என்கிறார்கள். அப்படியானால் எங்களை கௌரவர்கள் ஆக்குகிறார்கள். போருக்கு தயாராகிறார்கள். நடிகர்கள் சங்க தேர்தலை போராக மாற்றிவிடாதீர்கள்.
அத்தனையும் சரத் அணிக்கே
கரூரில் உள்ள 37 ஓட்டுகளும் சரத்குமார் அணிக்கே ஓட்டு விழவேண்டும். அதுவும் 29 பேருக்கும் விழவேண்டும்.
நானும் நடிக்கிறேன், நீயும் நடிக்கிறே
நான் வில்லனாக நடிக்கிறேன், நீயும் நடிக்கிறாய். ஒன்றாக இருக்க வேண்டும். பணம் கொடு ஓட்டு போடுகிறேன் என்று சொல்லாதே. 500, 1000 வைத்துக்கொண்டு எத்தனை நாள் ஓட்ட முடியும் என்றார் அவர் சூடாக.