திரைத் துளி
சென்னை:
தன்னுடைய வீட்டின் மீது கல்வீசிய சம்பவத்தை அரசியலாக்க நடிகை ராதிகா முயல்கிறார் என்றார் தமிழகஅமைச்சர் வளர்மதி ஜெபராஜ்.
ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நடிகை ராதிகா தன்னுடைய ஆட்களை விட்டே, தன் வீட்டில் கற்களை எறியச் செய்து விட்டு, இதைக் காரணம்காட்டி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று ஆளுநரிடம் புகார் செய்துள்ளார்.
ஆனால், இதுவரை அவர் போலீஸில் எந்தவிதப் புகாரையுடம் செய்யவில்லை. அவர் இந்த விஷயத்தைஅரசியலாக்குகிறார் என்பது இதிலிருந்தே தெரிகிறது.
மேலும், திமுக தொண்டர்கள்தான் நடிகை விஜயசாந்தி வீட்டையும், நகைச்சுவை நடிகர் எஸ்.எஸ். சந்திரன்வீட்டையும் தாக்கியுள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும் என்று கூறினார் வளர்மதி ஜெபராஜ்.
யு.என்.ஐ.
Comments


Click it and Unblock the Notifications