Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அவங்க பெயரை வெளியிட்டு அசிங்கப்படுத்தணும்: ராதிகா ஆப்தே ஆவேசம்
Recommended Video
மும்பை: பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் குறித்து பேட்டி அளித்துள்ளார் நடிகை ராதிகா ஆப்தே.
பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் பாலிவுட்டில் உள்ளது என்று பிரபல நடிகர்கள், நடிககைள் தெரிவித்துள்ளனர். ஆனால் அப்படி அழைப்பவர்களின் பெயரை இதுவரை யாருமே வெளியிடவில்லை.
இந்நிலையில் இது குறித்து நடிகை ராதிகா ஆப்தே கூறியிருப்பதாவது,
பெண்கள்
பாலியல் தொல்லைக்கு ஆளானது குறித்து பல பெண்கள் தானாக முன்வந்து தெரிவிக்கிறார்கள். அவர்களின் புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்க ஏதாவது செய்ய வேண்டும்.
நடிகர்கள்
நடிகைகள் மட்டும் அல்ல நடிகர்களுக்கும் பாலியல் தொல்லை கொடுக்கப்படுகிறது. சினிமா துறையில் பாலியல் தொல்லைக்கு ஆளான பல ஆண்களை எனக்கு தெரியும்.
படம்
பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பவர்களின் பெயர்களை வெளியே தெரிவிக்க வேண்டும். எதை செய்தாவது பட வாய்ப்பை பெற வேண்டும் என்றும் சிலர் உள்ளனர். அதையும் மறுக்க முடியாது.
திறமை
திறமைக்கு ஏற்ப வாய்ப்பு கிடைக்கும். பாலியல் தொல்லை கொடுப்பவர்களின் பெயரை தெரிவித்தால் நம் கெரியரை நாசமாகிவிடுவார்களோ என்ற பயம் உள்ளது. பெரிய ஆளான அவர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று கூறினால் மக்கள் நம்புவார்களா என்ற சந்தேகமும் பலருக்கு உள்ளது என்று ராதிகா தெரிவித்துள்ளார்.