Don't Miss!
- News வெள்ள பாதிப்பிலிருந்து மீளாத துபாய்.. இரண்டாவது நாளாக இன்றும் சென்னை டூ UAE விமானங்கள் ரத்து!
- Sports IPL 2024 : ஒரு சம்பவம்.. 3 அணிகளின் சோலியும் முடிஞ்ச்.. அம்பானியை கிண்டல் செய்யும் சிஎஸ்கே ஃபேன்ஸ்!
- Automobiles தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
பாலியல் தொல்லை குறித்து நடிகைகள் ஏன் பேசுவது இல்லை தெரியுமா?: ராதிகா ஆப்தே
Recommended Video
மும்பை: பாலியல் தொல்லை பற்றி பேசினால் நடிகைகளின் கெரியர் நாசமாகிவிடும் என்று ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.
ஆர். பால்கி இயக்கத்தில் அக்ஷய் குமார், ராதிகா ஆப்தே, சோனம் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்மேன் படம் வரும் 25ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை அக்ஷயின் மனைவி ட்விங்கிள் கன்னா தயாரித்துள்ளார்.
இந்நிலையில் ராதிகா ஆப்தே பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,
நடிகை
பாலியல் தொல்லை பற்றி ஏன் யாரும் பேசுவது இல்லை என்றால் தைரியமாக பேசினால் அவர்களின் கெரியர் நாசமாகிவிடும். அவர்களின் கனவு கனவாகவே போய்விடும் அதனால் தான் நடிகைகள் யாரும் பாலியல் தொல்லை குறித்து வாய் திறப்பது இல்லை.
பேச வேண்டும்
பாலியல் தொல்லைகளுக்கு எதிராக பேச வேண்டும். இல்லை என்றால் அதை நிறுத்த முடியாது. பேசினால் மட்டும் போதாது முடியாது என்றும் கூற வேண்டும்.
துணிச்சல்
பாலியல் தொல்லை குறித்து துணிச்சலாக பேசுவோருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். இந்த மாற்றம் உடனே நடந்துவிடாது. மாற்றம் ஏற்பட மக்களுக்கு தைரியம் வர வேண்டும்.
அனுபவம்
எனக்கு மோசமான பாலியல் தொல்லை அனுபவம் எதுவும் இல்லை. எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்கள் பற்றி நான் ஏற்கனவே பேசிவிட்டேன். நான் எதையும் மறைப்பது இல்லை. அதே சமயம் மற்றவர்களின் பாலியல் தொல்லை பிரச்சனை பற்றி பேசவும் மாட்டேன் என்றார் ராதிகா ஆப்தே.