Don't Miss!
- News கர்நாடகா: குமாரசாமி, பிரஜ்வல், டிகே சுரேஷ்.. அதிகாரத்தை கைப்பற்ற முட்டி மோதும் 'கவுடா குடும்பங்கள்'!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பாலியல் தொல்லை குறித்து நடிகைகள் ஏன் பேசுவது இல்லை தெரியுமா?: ராதிகா ஆப்தே
Recommended Video
மும்பை: பாலியல் தொல்லை பற்றி பேசினால் நடிகைகளின் கெரியர் நாசமாகிவிடும் என்று ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.
ஆர். பால்கி இயக்கத்தில் அக்ஷய் குமார், ராதிகா ஆப்தே, சோனம் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்மேன் படம் வரும் 25ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை அக்ஷயின் மனைவி ட்விங்கிள் கன்னா தயாரித்துள்ளார்.
இந்நிலையில் ராதிகா ஆப்தே பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,
நடிகை
பாலியல் தொல்லை பற்றி ஏன் யாரும் பேசுவது இல்லை என்றால் தைரியமாக பேசினால் அவர்களின் கெரியர் நாசமாகிவிடும். அவர்களின் கனவு கனவாகவே போய்விடும் அதனால் தான் நடிகைகள் யாரும் பாலியல் தொல்லை குறித்து வாய் திறப்பது இல்லை.
பேச வேண்டும்
பாலியல் தொல்லைகளுக்கு எதிராக பேச வேண்டும். இல்லை என்றால் அதை நிறுத்த முடியாது. பேசினால் மட்டும் போதாது முடியாது என்றும் கூற வேண்டும்.
துணிச்சல்
பாலியல் தொல்லை குறித்து துணிச்சலாக பேசுவோருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். இந்த மாற்றம் உடனே நடந்துவிடாது. மாற்றம் ஏற்பட மக்களுக்கு தைரியம் வர வேண்டும்.
அனுபவம்
எனக்கு மோசமான பாலியல் தொல்லை அனுபவம் எதுவும் இல்லை. எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்கள் பற்றி நான் ஏற்கனவே பேசிவிட்டேன். நான் எதையும் மறைப்பது இல்லை. அதே சமயம் மற்றவர்களின் பாலியல் தொல்லை பிரச்சனை பற்றி பேசவும் மாட்டேன் என்றார் ராதிகா ஆப்தே.