Don't Miss!
- News பள்ளிக்கரணை ஆணவக் கொலையால் இறந்த கணவன்.. துக்கம் தாளாமல் விஷம் குடித்து தற்கொலை செய்த மனைவி
- Automobiles இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
முதல் நாள்...முதல் பட சூட்டிங்...மலரும் நினைவுகளை பகிர்ந்த ராதிகா
சென்னை : தனது முதல் படமான கிழக்கே போகும் ரயில் படத்தின் சூட்டிங்கின் போது எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை ராதிகா சரத்குமார். ட்விட்டரில் இந்த ஃபோட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
93 வது ஆஸ்கார் விருதுகள்...நாளை அதிகாலை அறிவிப்பு
இந்த படம் 1978 ம் ஆண்டு ரிலீசானது. டைரக்டர் பாரதிராஜா இயக்கிய இந்த படத்தில் ராதிகா, சுதாகர் ஆகியோர் நடித்திருந்தனர். சுமார் 43 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட இந்த ஃபோட்டோவை தற்போது ராதிகா பதிவிட்டுள்ளார்.
|
முதல் பட ஃபோட்டோ
அந்த பதிவில் அவர், கிழக்கே போகும் ரயில் படப்பின் போது முதல் நாள் நான் எடுத்துக் கொண்ட ஃபோட்டோ. அடுத்த படம், கடைசி நாள் சூட்டிங்கின் போது அனைவரும் சேர்ந்து எடுத்துக் கொண்டது. மற்ற ஃபோட்டோக்கள் லிப்ஸ்டிக் கலையாமல் சிரிப்பது போன்று எடுத்த ஃபோட்டோக்கள். இனிமையான நினைவுகள் என தெரிவித்தார்.
சினிமாவை விட்டு விலக நினைத்தேன்
தனது முதல் படத்தில் எவ்வாறு நடிக்க கற்றுக் கொண்டார், பாரதிராஜா எப்படி தன்னை இயக்கினார் எனவும் ராதிகா பல பேட்டிகள் கூறி உள்ளார். முதல் படத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலக நினைத்ததாக ராதிகா முந்தைய பேட்டிகளில் ராதிகா தெரிவித்துள்ளார்.
ஹிட் பட நடிகை
கிழக்கே போகும் ரயில் படத்திற்கு பிறகு தமிழ் மற்றும் தெலுங்கில் பேசப்படும் நடிகையாகி விட்டார் ராதிகா. ரசிகர்களின் ஆதரவை பெற்ற நடிகையாகவும் மாறி விட்டார். அடுத்தடுத்த பட வாய்ப்புக்களால் தனது முடிவை மாற்றிக் கொண்ட ராதிகா, பல ஹிட் படங்களில் நடித்தார். ஹிட் பட நடிகையாக 80 களில் முன்னணி நடிகையாக இருந்த ராதிகா, பல விருதுகளையும் வென்றார். 90 களில் பாரதிராஜாவின் கிழக்கு சீமையிலே படத்திற்கு பிறகு புதிய அவதாரம் எடுத்தார் ராதிகா.
சின்னத்திரையில் முத்திரை
பிறகு சின்னத்திரையில் அடியெடுத்து வைத்த ராதிகா, சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை துவக்கினார். சின்னத்திரையில் தயாரிப்பு, நடிப்பு என முத்திரை பதித்த ராதிகா, சித்தி, அண்ணாமலை, செல்லமே, வாணி ராணி என பல புகழ்பெற்ற சீரியல்களில் நடித்தார்.
சீரியல்களுக்கு குட் பை சொன்ன ராதிகா
சமீபத்தில் இனி சீரியல்களில் நடிக்க போவதில்லை என்ற அறிவிப்பை ராதிகா வெளியிட்டார். அத்துடன் தற்போது நடித்துக் கொண்டிருந்த சித்தி 2 சீரியலில் இருந்தும் விலகினார். இருப்பினும் தெலுங்கு படங்கள் பலவற்றில் பிஸியாக நடித்து வருகிறார்.