ராகவேந்திரா ராஜ்குமாருக்கு சிங்கப்பூரில் அறுவைச் சிகிச்சை!

மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன் ராகவேந்திரா ராஜ்குமார். இவரது வீடு பெங்களூர் சதாசிவ நகரில் உள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 15ந்தேதி தனது வீட்டுக்கு அருகே உள்ள உடற்பயிற்சி மையத்தில் அவர் பயிற்சியில் ஈடுபட்டபோது திடீரென்று மயங்கி விழுந்தார்.
உடனே அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்ததில், மூளையில் ரத்தம் உறைந்து இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், ராகவேந்திரா ராஜ்குமார் மேல் சிகிச்சைக்காக ஓரிரு நாட்களில் சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார். இன்று அவர் சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்படவிருக்கிறார்.
இதற்கிடையே, ராகவேந்திரா ராஜ்குமாரின் உடல் நிலை குறித்து சிலர் தவறான வதந்தி பரப்புவதாகவும், அதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்து உள்ளார்.


Click it and Unblock the Notifications











