3 மதத்தினருக்கும் ஒரே கோவில்.. ராகவா லாரன்ஸ் கட்டுகிறார்!
சென்னை : இந்து, முஸ்லிம், கிறிஸ்டின் ஆகிய மூன்று மதத்தினருக்கும் ஒரே கோவிலை கட்டுகிறார் ராகவா லாரன்ஸ்.
Recommended Video
முனி, காஞ்சனா போன்ற படங்களின் மூலம் தமிழ், தெலுங்கு, இந்தி என வெற்றிகரமாக வலம் வரும் நடிகர் மற்றும் இயக்குனர் தான் ராகவா லாரன்ஸ், இவர் பண வசதி இல்லாத ஏழைக் குழந்தைகளுக்கு மருத்துவம், கல்வி வசதிகள் செய்த தருவது உள்ளிட்ட சமூகநலத்திட்ட பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இதற்காக அவர் தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார்.

தற்போது, இந்து, முஸ்லிம், கிறிஸ்டின் என மூன்று மதங்களையும் ஒன்றிணைக்கும் ஒரு அசாத்திய விசயத்தை கையில் எடுத்துள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ். சமூகம் சார்ந்த சிந்தனைகளையும் சமூக சேவைகளையும் மேலும் அவர் தனது அறக்கட்டளையின் மூலமாக எத்தனையோ உதவிகளையும் செய்து வருகிறார்.
இப்போது அவர் மத வேறுபாடுகளை கடந்து மனிதம் தான் பெரிது என்பதை உணர்த்தும் வகையில் மூன்று மதத்தினரும் வந்து வழிபடும் படி ஓர் ஆலயம் அமைக்க இருக்கிறார். மதங்களாலும் சாதிகளாலும் மக்கள் பிரிக்கப்படுகிறார்கள் அதனால் தான் இந்த முயற்சி என்றார்.
மேலும், நெருப்பிற்கும் பசிக்கும் சாதி மதம் தெரியாது அந்த வகையில் அனைவரும் சமமாக உணவருந்த அந்த ஆலயத்தில் அன்னதான கூடம் அமைக்கப்பட்டு அனைவருக்கும் அன்னதானமும் வழங்க இருக்கிறார்.
இந்த அறப்பணி இதுவரை யாருமே சிந்தித்திராத முயற்சி. ராகவேந்திரர் சுவாமியின் பிறந்த நாளான இன்று இதை அறிவித்துள்ளார். இந்தப்பணிகளை மிகச்சிறப்பாக விரைவில் துவங்க இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











