Don't Miss!
- Sports மச்சக்காரன்யா நீ.. ஒரு போட்டிக்கு 3 கோடி சம்பளம்! ஒரு விக்கெட்டுக்கு 2.4 கோடி.. தீபக் சாஹரின் யோகம்
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஜல்லிக்கட்டு வெற்றியைக் கொண்டாட 1100 கிலோ கேக் வெட்டும் ராகவா லாரன்ஸ்!
சென்னை: ஜல்லிக்கட்டு வெற்றியைக் கொண்டாட பிரமாண்டமாக 1100 கிலோ கேக்கை மாணவர்களுடன் சேர்ந்து இன்று வெட்டுகிறார் ராகவா லாரன்ஸ்.
ஜல்லிக்கட்டுக்காக நடந்த மாணவர் மற்றும் இளைஞர்களின் போராட்டத்தில் தாமாகப் போய் பங்கேற்று, சில உதவிகளையும் செய்தார் ராகவா லாரன்ஸ். இதற்காக அவர் முதல்வராக இருந்த பன்னீர் செல்வத்தைச் சந்தித்தார். ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றியடைந்ததுமே, பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி, மாணவர்கள் அரசியலுக்கு வந்தால் ஆதரவு அளிப்பேன் என்றும் தெரிவித்தார்.
இப்போது ஜல்லிக்கட்டு வெற்றியைக் கொண்டாட முடிவெடுத்துள்ளார். மிகவும் கண்ணியத்துடனும் அமைதியாகவும் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம், கடைசி நாளில் வன்முறைக் களமாக மாறியது. அதில் மிகுந்த மன வருத்தம் அடைந்ததாகத் தெரிவித்த ராகவா லாரன், இந்த வெற்றியை பிரமாண்டமாகக் கொண்டாட வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதன்படி போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்களுடன் இணைந்து ஜல்லிக்கட்டு வெற்றி விழாவை 1100 கிலோ பிரமாண்டமான கேக் வெட்டி இன்று கொண்டாடுகிறார் லாரன்ஸ். இதற்கு முன்பு 1040 கிலோ கேக் தான் உலக ரெகார்டாக பதிவானது. அதை முறியடிக்கும் விதமாக 1100 கிலோ அளவில் திரைப்பட கலைஞர்கள், நடிகர்கள் முன்னிலையில் கேக்வெட்டி கொண்டாடுகிறார்.
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள வாவின் சிக்னல் அருகே இந்த கொண்டாட்டம் நடக்கவிருக்கிறது.