twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தெய்வத்துடன் போய் கேரள முதல்வரிடம் ரூ. 1 கோடி அளித்த ராகவா லாரன்ஸ்

    By Siva
    |

    சென்னை: நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து வெள்ள நிவாரண நிதிக்கு ரூ. 1 கோடி அளித்துள்ளார்.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் நிதியுதவி அளித்து வருகிறார்கள். கேப்டன் விஜயகாந்த் ரூ. 1 கோடி, விஜய் ரூ. 70 லட்சம், விக்ரம் ரூ. 35 லட்சம் என்று பலரும் லட்சக் கணக்கில் உதவி செய்துள்ளனர்.

    Raghava Lawrence meets Kerala CM, gives Rs. 1 crore

    இந்நிலையில் கேரளாவுக்கு ரூ. 1 கோடி நிதியுதவி அளிக்கப் போவதாக நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ட்விட்டரில் அறிவித்தார். அறிவிப்போடு நிறுத்திக் கொள்ளாமல் அவர் தெய்வமாக கருதும் அம்மாவுடன் நேற்று கேரளாவுக்கு கிளம்பிச் சென்றார்.

    கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து ரூ. 1 கோடிக்கான காசோலையை அளித்தார். பினராயி விஜயனை சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ராகவா லாரன்ஸ்.

    ராகவா லாரன்ஸ் செய்த செயலை பார்த்த நெட்டிசன்கள், நீங்கள் நல்லா இருக்கணும் என்று அவரை பாராட்டியுள்ளனர்.

    English summary
    Multi talented Raghava Lawrence tweeted that, 'Hi Friends and Fans..! Now I’m in Kerala. yesterday i met Honorable Chief Minister of Kerala Shri. Pinarayi Vijayan sir and handed over my donation for flood relief with my mother.. To do more service I need all your blessings..'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X