Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
'நான் சென்னை திரும்பும் வரை அமைதி காக்க வேண்டும்'... ரசிகர்களுக்கு ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்!
தன் மீது அவதூறு பரப்புபவர்கள் பற்றி கவலை பட வேண்டாம் என நடிகர் ராகவா லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Recommended Video
சென்னை: மும்பையில் இருந்து தான் திரும்ப வரும் வரை அமைதி காக்க வேண்டும் என தனது ரசிகர்களுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானுக்கும், நடிகர் ராகவா லாரன்சுக்கும் இடையே கடந்த சில நாட்களாக பிரச்சினை நிலவி வருகிறது. சீமானுக்கு ஆதரவாக சிலரும், லாரன்சுக்கு ஆதரவாக சிலரும் பேசி வருகிறார்கள்.
அந்த வகையில் சீமானுக்கு ஆதரவாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி செயல்பட்டு வருகிறார். லாரன்ஸ் மீது கடும் விமர்சனங்களை அவர் முன்வைத்து வருகிறார்.
இதற்கு லாரன்ஸ் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். திருநங்கைகள் ஒன்றுகூடி லாரன்சுக்கு ஆதரவாக பேட்டி கொடுத்தனர்.
இந்நிலையில் தன் மீது அவதூறு பரப்புபவர்கள் பற்றி கவலை பட வேண்டாம் என ரசிகர்களுக்கு லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாகவது,
பட வாய்ப்புக்காக பிரேக்கப் ஆனது போன்று நடிக்கும் வாரிசு நடிகர், நடிகை
வேண்டுகோள்
"காஞ்சனா 3 படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கு மிக்க நன்றி. ரசிகர்கள் மாற்றுத்திறனாளிகள் திரு நங்கைகள் மற்றும் ரசிகர்களுக்கு ராகவா லாரன்ஸின் அன்பு வேண்டுகோள். என்னை பற்றியும் எனது சேவைகளை பற்றியும் அவதூறு பேசுபவர்களை பற்றி கவலைபடாதீர்கள்.
புகார் வேண்டாம்
என் மீது அக்கறை உள்ள ஒரு சில மாற்றுத்திறனாளிகளும் திருநங்கைகளும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சம்மந்தப்பட்டவர் மீது புகார் அளிப்பதாக கேள்விப் பட்டேன். அப்படி எதுவும் செய்யாதீர்கள். பொறுமையை கடைபிடியுங்கள்.
நல்லதையே செய்வோம்
நாம் நமது வழியில் நல்லதை மட்டும் நினைப்போம். நல்லதையே செய்வோம்..அவர்கள் அவர்கள் வழியில் போகட்டும்.எனக்கு ஒரு சின்ன பிரச்சனை என்றால் உடனே ஓடி வருகிற உங்கள் ஒவ்வொருவருக்கும் என் குடும்பத்தார் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..
சென்னை திரும்பியதும்...
நான் மும்பையில் காஞ்சனா இந்தி படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறேன். படப்பிடிப்பு முடிந்து வந்தவுடன் ஒரு நல்ல முடிவு எடுப்போம். அது வரை அமைதி காப்போம். கடவுள் நமக்கான நல்லதை செய்வார்.
ஆண்டவன் அருள்
நமக்கு கெடுதல் நினைப்பவர்களுக்கும் நாம் நல்லது நடக்க ஆண்டவனை பிரார்த்திப்போம். நம்மை பற்றி புரிந்து கொள்ள ஆண்டவன் அருள் அவர்களுக்கு கிடைக்கட்டும்". இவ்வாறு ராகவா லாரன்ஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.