ராகவா லாரன்ஸின் உதவியாளரும், நடிகருமான பரத் தூக்கு போட்டு தற்கொலை
Recommended Video
சென்னை: நடிகரும், ராகவா லாரன்ஸின் உதவியாளருமான பரத் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸின் உதவியாளர் பரத். அவர் டான்ஸ் தவிர நடிகராகவும் இருந்து வந்தார். சென்னை விருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகரில் நண்பர்களுடன் வீடு எடுத்து வசித்து வந்தார்.

மின்சார கனவுகள் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வந்தார் பரத். மாற்றுத் திறனாளியான பரத் ராகவா லாரன்ஸின் நடனக் குழுவில் இருந்தார். மேலும் இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸின் குழந்தைகளுக்கு டான்ஸ் கற்றுக் கொடுத்து வந்தார்.
35 வயதான அவர் தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு திருமணம் ஆகவில்லை. வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியவில்லை என்ற விரக்தியில் அவர் இந்த விபரீத முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பரத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











