Don't Miss!
- News கரும்பு விவசாயி சின்னத்தால் எனக்கு அடி, உதை.. கதறிய கிருஷ்ணகிரி வேட்பாளர்- நாம் தமிழர் மீது புகார்!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Education தமிழக வேளாண் துறையில் காத்திருக்கும் வேலை...!
- Lifestyle இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பேயாக மாறி 'முனி' ராகவா லாரன்ஸையே மிரட்டும் இறுதிச்சுற்று ரித்திகா சிங்
சென்னை: பி. வாசு இயக்கும் சிவலிங்கா படப்பிடிப்பு பெங்களூரில் துவங்கியது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், இறுதிச்சுற்று புகழ் ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
பி. வாசு இயக்கத்தில் கன்னடத்தில் வெளியான படம் சிவலிங்கா. சிவராஜ்குமார், வேதிகா, ஊர்வசி உள்ளிட்டோர் நடித்த இந்த பேய் படம் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் இந்த படம் தமிழில் சிவலிங்கா என்ற பெயரிலேயே ரீமேக் செய்யப்படுகிறது.
படத்தை வாசுவே இயக்குகிறார். ராகவா லாரன்ஸ் ஹீரோவாகவும், இறுதிச்சுற்று புகழ் ரித்திகா சிங் ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். பி. வாசுவின் மகன் சக்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
I will be shooting for #ShivaLinga from tomorrow in Bangalore so I need all your blessing. https://t.co/gLzxNE385d pic.twitter.com/LvIE0lL8Dv
— Raghava Lawrence (@offl_Lawrence) July 31, 2016
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு பெங்களூரில் துவங்கியது. முதல்கட்ட படப்பிடிப்பு 25 நாட்கள் நடக்கிறது. இது குறித்து லாரன்ஸ் தனது ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
நண்பர்களே, ரசிகர்களே, என்னுடைய அடுத்த படமான சிவலிங்காவின் படப்பிடிப்பு நாளை முதல் பெங்களூரில் துவங்குகிறது. அதனால் உங்கள் அனைவரின் ஆசியும் தேவை. என் குழந்தைகளை அடுத்த 25 நாட்களுக்கு பார்க்க முடியாது என்பதால் மாலைப் பொழுதை மெரினா கடற்கரையில் மிளகாய் பஜ்ஜியுடன் கழித்தேன் என்று தெரிவித்துள்ளார்.