Don't Miss!
- Sports "மிஸ்டர் 360 தோனி".. அரண்டு போன கே எல் ராகுல்.. இதுவரை இப்படி ஒரு ஷாட்டை ஆடியதே இல்லை
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- News "இப்போது தான் இந்திய குடிமகளாக உணர்கிறேன்.." முதல்முறையாக வாக்களித்த ஈழத்தமிழச்சி ஆனந்த கண்ணீர்
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பேயாக மாறி 'முனி' ராகவா லாரன்ஸையே மிரட்டும் இறுதிச்சுற்று ரித்திகா சிங்
சென்னை: பி. வாசு இயக்கும் சிவலிங்கா படப்பிடிப்பு பெங்களூரில் துவங்கியது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், இறுதிச்சுற்று புகழ் ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
பி. வாசு இயக்கத்தில் கன்னடத்தில் வெளியான படம் சிவலிங்கா. சிவராஜ்குமார், வேதிகா, ஊர்வசி உள்ளிட்டோர் நடித்த இந்த பேய் படம் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் இந்த படம் தமிழில் சிவலிங்கா என்ற பெயரிலேயே ரீமேக் செய்யப்படுகிறது.
படத்தை வாசுவே இயக்குகிறார். ராகவா லாரன்ஸ் ஹீரோவாகவும், இறுதிச்சுற்று புகழ் ரித்திகா சிங் ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். பி. வாசுவின் மகன் சக்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
I will be shooting for #ShivaLinga from tomorrow in Bangalore so I need all your blessing. https://t.co/gLzxNE385d pic.twitter.com/LvIE0lL8Dv
— Raghava Lawrence (@offl_Lawrence) July 31, 2016
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு பெங்களூரில் துவங்கியது. முதல்கட்ட படப்பிடிப்பு 25 நாட்கள் நடக்கிறது. இது குறித்து லாரன்ஸ் தனது ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
நண்பர்களே, ரசிகர்களே, என்னுடைய அடுத்த படமான சிவலிங்காவின் படப்பிடிப்பு நாளை முதல் பெங்களூரில் துவங்குகிறது. அதனால் உங்கள் அனைவரின் ஆசியும் தேவை. என் குழந்தைகளை அடுத்த 25 நாட்களுக்கு பார்க்க முடியாது என்பதால் மாலைப் பொழுதை மெரினா கடற்கரையில் மிளகாய் பஜ்ஜியுடன் கழித்தேன் என்று தெரிவித்துள்ளார்.