Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பராமரிப்புப் பணியில் ரஜினியின் ராகவேந்திரா மண்டபம்? லதா மேடம் அப்படி சொல்லலியே.. பிஆர்ஓ விளக்கம்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் ராகவேந்திரா மண்டபத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாக லதா ரஜினிகாந்த் கூறியதாக உலாவும் தகவல் குறித்து அவரது பிஆர்ஓ விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கடந்த ஒரு வாரத்தில் எதிர்பாராத அளவுக்கு பரவியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
குறிப்பாக சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை கடந்த 5 நாட்களில் பல மடங்கு உயர்ந்து விட்டது. இதனால் கீழ்பாக்கம் மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகள் நிரம்பிவிட்டன.
திருமண மண்டபங்கள்
இதனை தொடர்ந்து பள்ளிகள் மற்றும் திருமண மண்டபங்கள் மற்றும் கல்லூரிகளை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பலரும் தங்களின் திருமண மண்டபங்களை அரசு மருத்துவமனையாக பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்து வருகின்றனர்.
பராமரிப்பு பணி?
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தின் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் 3 மாதங்களுக்கு எந்த நிகழ்ச்சியும் நடைபெறாது என லதா ரஜினிகாந்த் கூறியதாக தகவல் வெளியானது.
ரஜினிகாந்த் பிஆர்ஓ
இந்நிலையில் ராகவேந்திரா திருமண மண்டபம் மெயின்டனஸில் இருப்பதாக லதா ரஜினிகாந்த் கூறியதாக வெளியான தகவல் பொய்யானது என்றும் அப்படி எதுவும் லதா ரஜினிகாந்தால் சொல்லப்படவில்லை என்றும் அவரது பிஆர்ஓ ரியாஸ் அகமது தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.
தேவை ஏற்படும் போது
கடந்த சில நாட்களுக்கு முன்பே நடிகர் ரஜினிகாந்த் தனது மண்டபத்தை மருத்துவமனையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கடிதம் எழுதினார். அதனை தொடர்ந்து மண்டபத்தை ஆய்வு செய்த மாநகராட்சி அதிகாரிகள், தேவை ஏற்படும் போது பயன்படுத்திக் கொள்வதாக கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.