twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தினமும் ஓவர் சண்டை.. திருட்டு வழக்கில் கைதானவர் அறைக்கு நடிகை ராகிணி மாற்றம்!

    By
    |

    பெங்களூரு: சிறையில் ஒரே அறையில் அடிக்கடி மோதிக்கொண்ட நடிகைகளை, வேறு வேறு அறைக்கு சிறைத்துறையினர் மாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.

    கன்னட சினிமா துறையினர் போதைப் பொருள் பயன்படுத்துவதாக வந்த தகவலை அடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்த விவகாரத்தில் சில சினிமா நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் சம்மந்தபட்டு இருந்தது தெரியவந்தது.

    நடிச்சது கொஞ்சம்தான்.. இந்த நடிகைகளிடம் இவ்வளவு சொத்துக்களா? வருமான வரித்துறை விசாரிக்க முடிவு! நடிச்சது கொஞ்சம்தான்.. இந்த நடிகைகளிடம் இவ்வளவு சொத்துக்களா? வருமான வரித்துறை விசாரிக்க முடிவு!

    ராகிணி திவேதி கைது

    ராகிணி திவேதி கைது

    தொடர்ந்து நடத்திய விசாரணையில், போதைப் பொருட்களை பயன்படுத்தியது மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்தது தொடர்பாக, கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி, அவர்களுடைய நண்பர்கள் உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர்.

    பரப்பனஅக்ரஹாரா

    பரப்பனஅக்ரஹாரா

    இந்த வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போலீஸ் விசாரணையில், அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியதுடன், போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததும் தெரிய வந்துள்ளது.

    5 நாள் விசாரணை

    5 நாள் விசாரணை

    சட்டவிரோதமாக சொத்து சேர்த்து இருப்பதும் தெரியவந்துள்ளது. இதுபற்றி அமலாக்கத் துறையினர் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோரிடம் 5 நாட்கள் விசாரணை நடத்தினர். இதையடுத்து இந்த வழக்கு, வருமான வரித்துறைக்கு சென்றுள்ளது. அவர்கள் இவ்வளவு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக விசாரிக்க உள்ளனர்.

    நள்ளிரவு வரை

    நள்ளிரவு வரை

    இந்நிலையில் சிறையில் ஒரே அறையில் அடைக்கப்பட்டு இருந்த சஞ்சனாவும் ராகிணியும் தினமும் மோதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. நடிகை ராகிணி, இரவில் புத்தகம் படிப்பதை வழக்கமாக வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது. நள்ளிரவு வரை ராகிணி படிப்பதால், அதே அறையில் அடைக்கப்பட்டுள்ள சஞ்சனா கல்ராணியால் தூங்க முடியவில்லையாம்.

    சிறை நிர்வாகம்

    சிறை நிர்வாகம்

    இதனால் லைட்டை அணைப்பது தொடர்பாக இருவருக்கும் மோதல் ஏற்பட்டு வந்தது. இதுபற்றி சிறை நிர்வாகத்துக்கு தகவல் சென்றதாகக் கூறப்படுகிறது. போதை வழக்கில் கைதாகி இருப்பதால், இவர்களுக்கு தனி அறை ஒதுக்க சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதையடுத்து அவர்களை வெவ்வேறு அறைகளுக்கு மாற்றியுள்ளனர்.

    கிரிக்கெட் சூதாட்டம்

    கிரிக்கெட் சூதாட்டம்

    நடிகை சஞ்சனா கல்ராணி, திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பெண் கைதி ஒருவரின் அறைக்கும் நடிகை ராகிணி திவேதி, கிரிக்கெட் சூதாட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள பெண் கைதி அறைக்கும் மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    English summary
    Ragini Dwivedi and Sanjjanaa Have been moved to separate prison cells in parappana agrahara jail.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X