த்ரிஷா, ராணா மறுபடியும் பிரிஞ்சுட்டாங்களாம்: காரணம் நடிகை ராகினி திவேதி?
சென்னை: நடிகை த்ரிஷாவும், அவரது காதலர் ராணாவும் மறுபடியும் பிரிந்துவிட்டார்களாம். தற்போதைய பிரிவுக்கு கன்னட நடிகை ராகினி திவேதி காரணம் என்று கூறப்படுகிறது.
நடிகை த்ரிஷா தெலுங்கு நடிகர் ராணாவை காதலிப்பது அனைவரும் அறிந்ததே. காதலர்களுக்குள் ஊடல் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இவர்களுக்குள் ஊடல் கொஞ்சம் ஓவராகவே உள்ளது.
சரி விஷயத்திற்கு வருவோம், அவர்கள் மறுபடியும் பிரிந்துவிட்டார்களாம்.

த்ரிஷா
த்ரிஷாவும், ராணாவும் பிரிவதும், சேர்வதுமாகத் தான் பலகாலமாக உள்ளனர். இந்நிலையில் தான் மீண்டும் ஒரு பிரேக்கப்.

ராணா
ராணா இந்த நடிகையை காதலிக்கிறார், அந்த நடிகையை காதலிக்கிறார் என்று பலமுறை செய்திகள் வந்தன, வருகின்றன. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கூட பாலிவுட் நடிகை ஒருவருடன் அவரது பெயர் கிசுகிசுக்கப்பட்டது.

காரணம்
ராணா யாரையாவது காதலிக்கிறார் என்று செய்தி வருகையில் அவரும், த்ரிஷாவும் பிரிந்துவிட்டனர் என்ற செய்தி தவறாமல் வரும். அவர்களின் காதலை அத்துவிட்ட நடிகை என்று அப்போதைய காதலியின் பெயர் வரும். தற்போதும் அப்படித்தான்.

சிமா விருது
மலேசியாவில் நடைபெற்ற சிமா விருது விழாவுக்கு ராணாவும், த்ரிஷாவும் ஜோடிபோட்டு சென்றனர். அதன் பிறகு பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டார்களாம்.

ராகினி
கன்னட நடிகை ராகினி திவேதிக்கும், ராணாவுக்கும் இடையே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது தான் த்ரிஷாவுக்கும், அவருக்குமான காதல் பிரிய காரணம் என்று கூறப்படுகிறது.

இல்லை
செய்திகளை பார்த்து பதறிப்போன ராகினி திவேதி கூறுகையில், நான் ராணாவை டேட் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











