Don't Miss!
- Finance சிங்கிளாக வாழும் பெண்களே.. இதை பாலோ பண்ணுங்க..!!
- News பிரியாணியால் வம்பில் மாட்டிய பிரேமலதா.. திடீரென பறந்த புகார்.. விஜயகாந்த் நினைவிடத்தில் என்ன நடந்தது
- Automobiles எல்லாரும் ஃப்ளோரிடாவுக்கு கிளம்ப போறாங்க.. ரோல்ஸ் ராய்ஸ் காரை இலவசமா தர போறாங்களாம்!! ஒரே ஒரு நிபந்தனைதான்!
- Lifestyle Today Rasi Palan 19 March 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனையில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது...
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Technology புது SIM கார்டு ரூல்ஸ்.. இனி 7 நாட்களுக்கு ஒன்னுமே செய்ய முடியாது.. கஸ்டமர்கள் படப்போகும் பாடு.. எப்போது அமல்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
கடும் கஷ்டத்தை அனுபவிக்கிறேன்..' ரசிகர்களுடன் உரையாடிய பிரபல நடிகை கண்ணீர்.. ரசிகர்கள் அதிர்ச்சி!
பெங்களூரு: சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் உரையாடிய நடிகை ராகிணி, திடீரென்று கண்ணீர் விட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரபல கன்னட நடிகை ராகிணி திவேதி. இவர் தமிழில், நிமிர்ந்து நில் படத்தில் நடித்திருந்தார்.
இந்தியன் 2 படத்துக்கு வந்த புதிய சிக்கல்.. இந்த கேமராமேனும் கிளம்ப போறாராம்.. அப்செட்டில் ஷங்கர்?
போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த இவர், இப்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
செப்டம்பர் மாதம்
போதைப் பொருட்களை பயன்படுத்தியது மற்றும் அதை விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உட்பட சிலர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
சிறப்பு பூஜைகள்
பின்னர் ராகிணி திவேதி, சஞ்சனாவுக்கு ஜாமீன் கிடைத்தது. முதலில் சஞ்சனாவுக்கு மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் வழங்கப்பட்டது. பின்னர் நடிகை ராகிணிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. சிறையில் இருந்து வெளியே வந்த பின் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தி வருகிறார் ராகிணி.
சிறை வாழ்க்கை
சமூக இணையதளங்களில் ஆர்வம் கொண்ட நடிகை ராகிணி, சிறையில் இருந்து வெளியே வந்த பின் முதல் முறையாக இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள் சிலர், சிறை வாழ்க்கை குறித்து அவரிடம் கேட்டபோது கண்ணீர்விட்டு அழுதார்.
நிறைய போராட்டங்கள்
அவர் கூறியதாவது: எனக்கு உடல்நல பாதிப்பு உள்ளது. அதில் இருந்து நான் மெதுவாக குணமடைந்து வருகிறேன். உங்களிடம் நிறைய விஷயங்களை பகிர்ந்துகொள்ள வேண்டி இருக்கிறது. சரியான நேரம் வரும்போது அது பற்றி பேசுவேன். நான் என் வாழ்க்கையில் நிறைய போராட்டங்களை கண்டிருக்கிறேன்.
அவதூறான கருத்து
12 வருடம் திரைத்துறையில் இருக்கிறேன். கடந்த சில மாதங்களாக கடினமான கஷ்டங்களை அனுபவித்து வருகிறேன். பலர் அவதூறான கருத்துகளை என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் தெரிவித்து வருகின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு என்னவிதமான மகிழ்ச்சி கிடைக்கும் என்று எனக்கு தெரியவில்லை.
யோசிக்க வேண்டும்
அவர்கள், இன்னொரு முறை அந்த அவதூறு கமென்ட்களை படித்துவிட்டு, அவர்கள் குடும்பத்தினர் மீது இப்படி சொல்வார்களா என்பதுபற்றி யோசிக்க வேண்டும். அதை நினைத்தால் என் தூக்கம் போய்விடுகிறது. நான் என் மீதான நம்பிக்கையை விட்டுவிடவில்லை. இதில் இருந்து வலுவாக மீண்டு வருவேன். இவ்வாறு கூறியுள்ளார். பேசும்போது அடிக்கடி கண்ணீர் விட்ட ராகிணிக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறினர்.