Don't Miss!
- News "பேசுவதை எல்லாம் ஒட்டு கேக்குறாங்க.. இதனால நான் செல்போனை யூஸ் பண்றதே இல்லை.." ஹெச்.ராஜா பகீர் புகார்
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஊசின்னா எனக்கு ரொம்ப பயம் இருந்தாலும் போட்டுக்குறேன்.. ராய் லட்சுமி!
சென்னை : கொரோனாவுக்கு எதிரான போரில் வெல்ல தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
எனவே தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திரைப் பிரபலங்கள் பலரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு அந்த புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை ராய் லட்சுமி இப்பொழுது தனக்கு ஊசி என்றால் பயம் இருப்பினும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டேன் என புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
இரண்டாவது அலை
கொரோனா இரண்டாவது அலை முதல் அலையை விடவும் கோரமான முகத்தை கொண்டுள்ளது என்பதை காட்டியுள்ளது. அதன் காரணமாக எதிர்பாராத பல உயிர்ச் சேதங்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் அரசு ஊரடங்கு, தடுப்பூசி ,சமூக இடைவெளி, கட்டாயம் முகக் கவசம் அணிவது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை முன்னெடுத்து நடத்தி கொரோனா பரவலை கட்டுப்படுத்தி வருகிறது.
தயக்கங்களும் சந்தேகங்களும்
இருப்பினும் இந்தியா போன்ற ஜனத்தொகை அதிகமாக உள்ள நாட்டில் கொரோனா பரவலை எடுப்பது மிகவும் கடினமாக இருக்கின்ற சூழலில் தடுப்பூசி போட்டுக் கொள்வதால் நோய் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி அதிதீவிரமாக இந்தியா முழுதும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தடுப்பூசி நல்ல பலன் அளித்தாலும் இன்றும் மக்கள் மத்தியில் சில தயக்கங்களும் சந்தேகங்களும் இருக்கத்தான் செய்கிறது.
திரைப் பிரபலங்கள்
இதனை போக்கும் வகையில் திரைப் பிரபலங்கள் பலர் தடுப்பூசி போட்டுக் கொண்டு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த வகையில் நடிகர்கள் சூர்யா,ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா,விக்னேஷ் சிவன், மாளவிகா மோகனன், ஆர்யா, நிவேதா தாமஸ் என பலர் தடுப்பூசி போட்டுக் கொண்டு அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தனர். மேலும் தங்களது ரசிகர்களையும் தடுப்பூசியை தவறாமல் போட்டு கொள்ளுமாறு அறிவுறுத்தி வந்தனர்.
தடுப்பூசி அவசியம்
இந்த நிலையில் நடிகை ராய் லட்சுமி தடுப்பூசி போட்டுக் கொண்டு அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டுள்ளார். பொதுவாக எனக்கு ஊசி போடுவது என்றால் ரொம்பவும் பயம் இருப்பினும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனில் கொரோனா தடுப்பூசி அவசியம். எனவே நான் ஊசி போட்டுக் கொண்டு நீங்களும் தவறாமல் போட்டுக் கொள்ளுங்கள் என புகைப்படங்களை வெளியிட்டு ராய் லட்சுமி பதிவிட்டுள்ளார்.