Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நடிகர்களுக்கு தந்த சம்பளத்துக்கு வரி செலுத்தவில்லை லிங்குசாமி! - இரண்டாவது நாளாக சோதனை
இயக்குநர் லிங்குசாமி, தன் சகோதரர் சுபாஷ் சந்திரபோசுடன் இணைந்து படங்களையும் தயாரிக்கிறார். கடந்த ஆண்டு அதிக படங்களைத் தயாரித்தது இவர்கள் நிறுவனம்தான்.
இந்த ஆண்டும் ஒரே நேரத்தில் 6 படங்களைத் தயாரித்து வருகிறார். இவற்றில் கமல், சூர்யா நடிக்கும் படங்களும் அடங்கும்.
நேற்று முன் தினம் மட்டும் இவர் தயாரிக்கும் மூன்று படங்களின் அறிவிப்புகள் மற்றும் செய்திகள் பத்திரிகைகளில் வெளியாகியிருந்தன.
அவை, கமல் நடிக்கும் உத்தம வில்லன், சூர்யா நடிக்கும் படம் மற்றும் கோலிசோடா போன்றவையாகும்.
இந்த நிலையில் நேற்று காலையிலிருந்து வருமான வரி அதிகாரிகள் லிங்குசாமி அலுவலகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த அதிகாரிகள் அனைவரும் டெல்லியிலிருந்து வந்திருந்தனர்.
நேற்று இரவு முழுவதும் விடிவிடிய இந்த சோதனை நடந்தது. அப்போது ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இந்த சோதனையில், பல கோடி ரூபாய்க்கு லிங்குசாமி வரி கட்டாதது தெரிய வந்துள்ளது. குறிப்பாக நடிகர் நடிகைகளுக்கு சந்த சம்பளம் மற்றும் முன் பணத்துக்கு வரியே கட்டவில்லையாம் லிங்குசாமி.
மேலும் படத்தயாரிப்புக்கென செலவழித்த தொகை குறித்து முறையான கணக்கு வழக்குகள் இல்லாததையும் பார்த்த அதிகாரிகள், இன்றும் சோதனையைத் தொடர்ந்தனர்.
மாலை வரை நடந 'மராத்தான் சோதனை'களுக்குப் பிறகு ஏராளமான ஆவணங்களுடன் அதிகாரிகள் கிளம்பினர்.
இந்த சோதனை விவரங்கள் குறித்து எதுவும் சொல்வதற்கில்லை என்று கூறிவிட்டுச் சென்றனர் அதிகாரிகள்.
இயக்குநர் லிங்குசாமியோ, இதெல்லாம் வழக்கமான சோதனைங்க என்றார்.