Don't Miss!
- News உடைந்து அழுது.. நொறுங்கிய கல்பனா.. பாஜகவை தேசிய அளவில் துரத்தும் "கண்ணீர்".. நிலைமையே மாறுதே
- Finance ஏப்ரல் 1 ஆம் தேதியன்று ரூ.2000 நோட்டுகளை ஆர்பிஐ கிளைகளில் டெபாசிட் செய்ய தடை
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- Sports IPL Classics - டெல்லியை பொளந்த மும்பை அணி.. 146 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற கதை
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நம்ம ‘தண்ணி’ பிரச்சினை இப்போ ஹாலிவுட் வரை பேமஸ்... யாரு பீல் பண்ணியிருக்காங்க பாருங்க!
சென்னை தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினை தொடர்பாக ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ வருத்தம் தெரிவித்துள்ளார்.
சென்னை: மழையால் மட்டுமே சென்னையை காப்பாற்ற முடியும் என பிரபல ஹாலிவுட் நடிகரும், டைட்டானிக் படத்தின் ஹீரோவுமான லியோனார்டோ டிக்காப்ரியோ தெரிவித்துள்ளார்.
தற்போது சென்னை மாநகரின் மிகச்பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது தண்ணீர் பிரச்சினை. நிலத்தடி நீர் முற்றிலும் குறைந்துவிட்ட நிலையில், வெளியூர்களில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்சினையை சரி செய்ய மத்திய, மாநில அரசுகள் பல கோடிகளை கொட்டி, திட்டங்கள் தீட்டி வருகின்றன. மறுபுறம் மக்களும் தங்களால் முடிந்த அளவுக்கு இயற்கையை பேணிக் காக்க மரம் நடுவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் சென்னையின் தண்ணீர் பிரச்சினை உலகளவில் கவனம் பெற்று வருகிறது.
டைட்டானிக் ஹீரோ:
இந்நிலையில் டைட்டானிக் படம் மூலம் தமிழ் மக்களுக்கு பரிச்சயமான பிரபல ஹாலிவுட் ஹீரோ லியானார்டோ டி காப்ரியோவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பிபிசியில் வெளிவந்த சென்னை வறட்சி குறித்த செய்தியை படித்த பின்பு, தனது வருத்தத்தை அவர் பதிவு செய்துள்ளார்.
மழை தேவை:
அப்பதிவில் அவர், "மழையால் மட்டுமே சென்னையை காப்பாற்ற முடியும். ஒரு கிணறு முற்றிலுமாக வறண்டு இருக்கிறது. இந்தியாவின் தென்னகத்து நகரமான சென்னை கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை சந்தித்துள்ளது. ஏரிகள் வறண்டுவிட்டன. குடிநீருக்காக மக்கள் காலி குடங்களுடன் அரசு தரும் தண்ணீருக்காக வரிசையில் மணி கணக்காக காத்திருக்கின்றனர்.
|
தண்ணீர் தட்டுப்பாடு:
தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக ஹோட்டல்கள் மூடப்பட்டுவிட்டன. அரசு அதிகாரிகள் இந்தத் தட்டுப்பாட்டை போக்க மாற்று வழிகளை தொடர்ந்து யோசித்து வருகின்றனர். ஆனால், சென்னை வாழ் மக்கள் மழைக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்கின்றனர். மழையால் மட்டுமே சென்னையை காப்பாற்ற முடியும்'" என வருத்தம் தெரிவித்துள்ளார்.
கிணறு புகைப்படம்:
இந்தப் பதிவில் அவர், பெரிய கிணறு ஒன்றில் மக்கள் வாளி மூலம் தண்ணீர் இறைக்கும் புகைப்படம் ஒன்றையும் சேர்த்து பதிவிட்டுள்ளார். இங்கு தமிழ் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள் பலர், சென்னை தண்ணீர் தட்டுப்பாடு பற்றி வாய் திறக்காமல் உள்ள நிலையில், ஹாலிவுட் ஹீரோ இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அய்யய்யோ மீண்டும் மீண்டுமா?.. ரஜினி மகளின் ஃபார்முலாவை கையில் எடுக்கும் விஜய் மகன்?
-
செலவு செஞ்சது சில கோடி.. சம்பாதித்தது பல கோடியாம்.. திருமணத்தையே பிசினஸாக மாற்றிய காமெடி நடிகர்?
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி