Don't Miss!
- News சிவில் சர்வீஸ் தேர்வில் 9வது முயற்சியில் தூய்மை பணியாளர் மகன் வெற்றி.. கலங்க வைத்த ரியல் ஸ்டோரி
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா!
சென்னை: செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் ப்ரீத்,சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் என்ஜிகே எனக்கப்டும் நந்த கோபால கிருஷ்ணன் திரைப்படம். இந்த திரைப்படம் மே 31 வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரொமோசன் வேலைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது.
அதன் ஒரு பகுதியாக #AskSuriya என்ற ஹேஷ்டேக் மூலம் சூர்யாவிடம் கேள்வி கேட்கலாம் என்றும், அந்த கேள்விகளுக்கு சூர்யா பதிலளிப்பார் என்றும் ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டது. ட்விட்டர் இந்தியா மற்றும் ட்ரீம் வாரியர்ஸ் ஆகியவை இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தன.
இதில், தமிழக கிரிக்கெட் ரசிகர்களால் சின்னத்தளபதி என்று அழைக்கப்படும் இந்திய அணியின் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா நடிகர் சூர்யாவிடம் #AskSuriya வில் கேள்வி கேட்டிருந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உங்களுக்கு எந்த வீரரை பிடிக்கும்? ஏன் என்று கேள்வி எழுப்பியிருந்தார் ரெய்னா.
இதற்கு பதில் அளித்த சூர்யா, உங்களையும் தோனியையும் பிடிக்கும் என்றும், ரெய்னா மற்றும் தோனியை அவர்களது பாட்டு பாடும் திறமைக்காகவும், தோனியை அவரது ஓவியம் வரையும் திறனுக்காகவும் பிடிக்கும் என்று தெரிவித்தார். சூர்யாவின் இந்த பதிலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் "Singham is 1.5 tonnes of #Yellov" என்ற வாசகத்துடன் ஷேர் செய்துள்ளது.
இதற்கு முன்பு மே 9 2015ல் இதே போல ட்விட்டரில் #AskSuriya ஹேஷ் டேக் மூலம் நடிகர் சூர்யா ரசிகர்களிடம் பேசினார். அதன் பின்னர் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கேள்விபதில் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். என்பது குறிப்பிடத்தக்கது. #AskSuriya ஹேஷ் டேக் 2015ல் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் இடம் பிடித்ததை போல, இந்த ஆண்டும் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
Sent from my iPhone