Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
வேகமாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய நடிகர்
ஹைதராபாத்:வோல்வோ காரை அதிவேகமாக ஓட்டிச் சென்று காம்புவுண்டு சுவரில் மோதிய நடிகர் ராஜ் தருண் யாரும் பார்ப்பதற்கு முன்பு தப்பியோடிவிட்டார்.
தெலுங்கு நடிகர் ராஜ் தருண் TS09EX1100 என்கிற பதிவு எண் கொண்ட வோல்வோ காரில் நேற்றிரவு சென்றுள்ளார். ஹைதராபாத் அல்காபூரி டவுன்ஷிப் பகுதியில் வேகமாக சென்றபோது கார் தருணின் கட்டுப்பாட்டை இழந்து சுவர் ஒன்றின் மீது மோதியது.
இந்த சம்பவத்தில் தருணுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. யாரும் தன்னை பார்க்கும் முன்பு அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். காரை ஓட்டி வந்தது தெலுங்கு பட நடிகர் என்று அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் வந்து பார்த்தபோது காரில் யாரும் இல்லை. காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியது புன்னகை தேசம், காதல் சுகமானது, எனக்கு 20 உனக்கு 18 உள்ளிட்ட படங்களில் நடித்த தருண் குமார் என்று தவறாக புரிந்து கொள்ளப்பட்டது.
பின்னர் காரின் பதிவு எண் மற்றும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா வீடியோவை பார்த்த பிறகே அது தருண் குமார் இல்லை ராஜ் தருண் என்பது தெரிய வந்தது. விபத்துக்குள்ளான கார் ஹைதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருடையது. அவர் படங்களை தயாரிக்கவும் செய்கிறார்.
காரை படுவேகமாக ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்திவிட்டார் தருண் குமார் என்ற தகவல் தீயாக பரவியது. இதையடுத்து அவர் நான் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தான் இருந்தேன், எங்கும் செல்லவில்லை, விபத்திற்கும் எனக்கும் தொடர்பு இல்லை என்று விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டார்.
காதலில் அதுதான் ரொம்ப முக்கியம்.. கமலின் மகள் கொடுத்த தடாலடி அட்வைஸ்!
இந்நிலையில் ராஜ் தருண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்தபோது ராஜ் தருண் குடிபோதையில் இருந்தாரா என்பது தெரியவில்லை.